தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 18,023 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மாவட்ட வாரியான விவரம்:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.
அதன்படி,
தமிழகத்தில் இன்று 18,023 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின்
மொத்த எண்ணிக்கை 22 லட்சத்து 74 ஆயிரத்து 744 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தினசரி ஆயிரத்திற்கு மேல் குறைந்து கொண்டு இருக்கிறது.
தமிழகத்தில் தற்போது 2,18,595 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
வைரஸ்
பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 31,045 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ்
செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து
குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 20 லட்சத்து 28 ஆயிரத்து 344 ஆக உயர்ந்துள்ளது.
ஆனாலும்
வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 409 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால்
தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 27
ஆயிரத்து 765 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று மேலும் 1,437 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...