தமிழகத்தில் இன்று மேலும் 1,559 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,559 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதிதாக 26 பேர் உயிரிழந்தனர்.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை வியாழக்கிழமை (ஆக. 26) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புதிதாக
1,559 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,
இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,07,206-ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக 26 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,814-ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவிலிருந்து
1,816 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக குணமடைந்து
வீடு திரும்பியோர் எண்ணிக்கை 25,54,323-ஆக அதிகரித்துள்ளது.












