தமிழகத்தில் இன்று மேலும் 1,702 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் புதிதாக 1,702 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக
கரோனா பாதிப்பு எண்ணிக்கைகள் பற்றிய சுகாதாரத் துறையின் தரவுகள்
வெளியாகியுள்ளன. புதிதாக 1,702 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி
செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 25,95,935 ஆக
உயர்ந்துள்ளன.
மேலும் 1,892 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 25,41,432 பேர் குணமடைந்துள்ளனர்.
29 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 34,639 ஆக உயர்ந்துள்ளது.