சிலருக்கு படுத்தவுடன் மூடியவுடன் நன்றாக உறக்கம் வரும். அவர்கள் வரம் பெற்றவர்கள்.
நாம் உறங்காமல் விழித்திருப்பதால், நமது உடலில் இருக்கும் உறுப்புகளுக்கு ஓய்வு இருப்பதில்லை.
தூங்கினால் தான் அவற்றிற்கு ஓய்வு என்பது கிடைக்கிறது.
இந்த தூக்கமின்மையால் அதிக மன அழுத்தம், சோர்வு உள்ளீட்டவை ஏற்பட்டு பல்வேறு பிரச்சனைகளை கொடுக்கும்.
தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படும் நபவர்கள் மூச்சில் கவனத்தஒ செலுத்தினால் மன அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வந்து உறங்கலாம்.
வெளி மூச்சு, உள்மூச்சு விடும் போது மூளை தன் செயல்பாடுகளை மொத்தமாக நிறுத்திவிட்டு அமைதி நிலைக்கு செல்கிறது. அத்துடன் மூக்கின் வழியே 4 நொடிகள் சுவாசத்தை உள் இழுக்கவும், 7 அல்லது 8 நொடிகள் மூச்சை நிறுத்தி பின், அதனை வாய் வழியாக விட வேண்டும்.
இதன் காரணமாக மூளைக்கு புத்துணர்ச்சி கிடைத்து நன்றாக உறக்கம் வரக்கூடும்.
இதை அடிக்கடி செய்தால் தேவையற்ற பதற்றங்கள், ரத்த அழுத்தம், மன அழுத்தம், உள்ளிட்டவை கட்டுக்குள் வரக்கூடும். இதனால், இதயத்தை பாதுகாக்க முடியும்.
இதை ஒன்றிரண்டு முறை செய்தாலே இதன் பலனை நாம் உடனே அனுபவிக்கலாம்.
முதலில் இது பெரியளவில் பலன் அளிக்காததை போல இருக்கும். ஆனால், இதை பழகிக் கொண்டால் ஒரு நிமிடத்திற்குள் உங்களுக்கு உறக்கம் வந்துவிடும். ஆனால், இதை முறையாக கடைபிடித்தால் தான் பலனுண்டு.