மே 2022 , மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதிய பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியலினை ( Nominal Roll ) அடிப்படையாகக் கொண்டு , நடைபெறவுள்ள மார்ச் 2023 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்விற்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கப்படவுள்ளது. எனவே , இது குறித்தான பின்வரும் அறிவுரைகளை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து மேல்நிலை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அனுப்பி வைத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.