அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், தரவரிசை பட்டியல் இன்று வெளியானது.
12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு www.tngasa.in என்ற இணையதள முகவரியில் மே 8 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
இதையடுத்து இன்று தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து கல்லூரி முதல்வர்களும் https://collegeportal.tngasa.in என்ற இணையதளத்தில் OTP எண்ணை பதிவு செய்து தரவரிசை பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 1,07,299 இடங்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னை பிரஸிடென்ஸி கல்லூரியில் உள்ள 1,140 இடங்களுக்கு 40,030 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தொடர்ந்து, கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரியில் 1433 இடங்களுக்கு 34,743 விண்ணப்பங்களும், சென்னை குயின் மேரிஸ் கல்லூரியில் 1,484 இடங்களுக்கு 24,256 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.
இன்று வெளியான தரவரிசை பட்டியலின்படி இறுதி இடத்தில் சென்னை கொளத்தூர் அரசு மகளிர் கலைக் கல்லூரி உள்ளது. இங்கு 230 இடங்களுக்கு 433 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...