25.08.2023 முதல் காலை உணவுத்திட்டம் - அனைத்து மாவட்ட பள்ளிகளிலும் தொடங்குவது குறித்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.
மாண்புமிகு
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் , தமிழ்நாட்டில் நகர்புறப் பகுதிகள்
மற்றும் ஊரகப் பகுதிகளில் செயல்படும் அனைத்து அரசுப் பள்ளிகளில் பயிலும்
தொடக்கப் பள்ளி மாணவ , மாணவியருக்கு விரிவுபடுத்தப்படுகிறது. அத்திட்டம்
நாகை மாவட்டம் , திருக்குவளையில் 25.08.2023 அன்று மாண்புமிகு முதலமைச்சர்
அவர்களால் துவக்கப்படுகிறது. அதே நாளில் அனைத்து மாவட்டங்களில் உள்ள
பள்ளிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள்
சார்ந்து , சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை செயலாளர் அவர்கள் அனைத்து
மாவட்ட ஆட்சியர்களுக்கும் பார்வை ( 2 ) ல் காணும் கடிதம் மூலம் ஆயத்த
பணிகள் மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மாவட்ட
ஆட்சியரின் அறிவுரையினை பெற்று அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (
தொடக்கக் கல்வி ) தங்கள் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளிலும்
அத்திட்டத்தினை மேற்கொள்ள செயல்படுத்திட தக்க நடவடிக்கை
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.