+2 தனித்தேர்வர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் ஜெனவரி 7முதல் 18 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது !
மார்ச் மாதம் தொடங்க உள்ள பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும்
தனித் தேர்வர்கள் இணைய வழியாக விண்ணப்பிக்குமாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம்
தெரிவித்துள்ளது.
www.dge.tn.nic.in என்ற இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்கவும். வரும்
7-ம் தேதி முதல் 18ம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துக்
கொள்ளலாம்.
அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஏற்கனவே நடத்திய தேர்வில் பங்கேற்று
தேர்ச்சி பெறாத பாடங்களில் மீண்டும் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்லது முதல் முறையாக பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு
எழுதும் தனித் தேர்வர்களும் விண்ணப்பிக்கலாம்.
மறுமுறை தேர்வு எழுதுபவர்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் தலா 50 ரூபாயும்,
இதர கட்டணமாக 35 ரூபாயும் செலுத்த வேண்டும். நேரடி தனித் தேர்வர்கள் தேர்வு
கட்டணமாக 150 ரூபாய் மற்றும் இதர கட்டணங்களையும் சேர்த்து 187 ரூபாய்
செலுத்துவது அவசியம்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...