தமிழகத்தில் அரசு/அரசு உதவி பெரும் கல்லுரியில் பயிலும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை கல்வி கட்டணத்திற்கு தக்கவாறு உயர்த்தி வழங்க மாண்புமிகு தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார் .பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புகளுக்கு அரசின் ஒதுக்கீட்டின் கீழ் தேர்வு செய்யப்படும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவர்களுக்கு கல்விகட்டணம் உயர்த்தும் போது கல்வி உதவி தொகையும் உயர்த்தி வழங்குவதற்கு முதலைமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பால் 74ஆயிரத்து 181 மாணவர்கள் பயன்பெறுவார்கள். மேலும்,பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர்
நலத்துறைகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் விடுதிகளிலும், மதுரை,
திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இயங்கி வரும் கள்ள சீரமைப்பு பள்ளிகளில்
பயிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச வழிகாட்டி நூல்கள்
வழங்கப்பட்டு வருகிறது.
இதே போல், பெரம்பலூர், சிவகங்கை, திருவண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி,
திண்டுக்கல், கிருஷ்ணகிரி மற்றும் கடலூர் ஆகிய மிகவும் பின் தங்கிய
மாவட்டங்களில் பயிலும் அனைத்து அரசு மற்றும் உதவிபெறும் பள்ளியில் பயிலும்
10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விலையில்லா வழிகாட்டி
புத்தகங்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்காக 2 கோடியே 47 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கவும் தமிழக முதலமைச்சர்
உத்தரவிட்டுள்ளார். அதனால், இந்த மாவட்டங்களில் பயிலும், 2 லட்சத்து
21ஆயிரத்து 400 மாணவர்கள் பயன்பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...