பள்ளி மாணவர்களுக்கு மின் சிக்கனம் குறித்து தெரிவிக்க பள்ளிக் கல்வி துறை நடவடிக்கை:
மின் சிக்கனத்தை வலியுறுத்தி, அரசு தற்போது மாணவர்கள் வாயிலாக, விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டுள்ளது.மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட, அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது மாணவர்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த, இலவச நோட்டு புத்தகத்தில் மின்சிக்கன விழிப்புணர்வு வாசகங்களை அரசு அச்சிட்டுள்ளது.
அதில், "மின் சிக்கனம் தேவை இக்கணம்", "நீரின்றி அமையாது உலகு" என்பது
திருவள்ளுவரின் கூற்று. தற்போது நீருடன் மின்சாரமும் மக்களின்
வாழ்வுக்கும், வளமைக்கும் மிகவும் இன்றியமையாததாக உள்ளது. அனல், நீர்,
காற்று, சூரிய மற்றும் பல்வேறு மின் உற்பத்தியில் இருக்கும் சவால்களை
கருத்தில் கொண்டும், நாளுக்கு நாள் உயர்ந்து வரும் மூலப்பொருட்களின்
விலைவாசியை கருத்தில் கொண்டும், வீடுகள் மற்றும் பள்ளிகளில் மின் சிக்கன
நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.
ஆடம்பரமாக செலவழியும் மின்சாரத்தை சிக்கனம் செய்வதால், மின் பற்றாக்குறை
குறையும். அதன் மூலம் அதிகப்படியான மின்சாரத்தை அத்தியாவசிய தேவைக்கு
பயன்படுத்த முடியும். மின் உற்பத்தியில் இருக்கும் இடர்பாடுகளை கருத்தில்
கொண்டால், ஒரு யூனிட் மின்சார சேமிப்பு, ஒரு யூனிட் மின் உற்பத்திக்கு
சமம்.தேவை இல்லாமல் இயங்கும் மின்விளக்குகள், மின்விசிறி மற்றும்
தொலைக்காட்சி பெட்டிகளை அணைப்பதன் மூலம், மின்சாரத்தை சேமிக்கலாம். சாதாரண
குண்டு பல்புக்கு பதிலாக சி.எப்.எல். எல்.ஈ.டி. பல்புகளை பயன்படுத்தி, 60
சதம் மின்சாரத்தை சேமிப்போம்.சூரிய ஓளி மூலம் நீர் சூடேற்றும் கருவியை (வாட்டர் ஹீட்டர்) பயன்படுத்துவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...