CAT தேர்வு முடிவுகள் வெளியிடு!
CAT எனப்படும் பொது நுழைவுத் தேர்வு முடிவுகள் புதன்கிழமையன்று வெளியாகின. கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் 11 முதல் நவம்பர் 6-ம் தேதி வரை நடைபெற்ற கணினி வழியான கேட் தேர்வில் நாடு முழுவதிலும் இருந்து இரண்டு லட்சம் பேர் பங்கேற்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை 13,121 பேர் கேட் தேர்வு எழுதினர். இந்நிலையில்
கேட் தேர்வின் முடிவுகள் புதன் கிழமை வெளியிடப்பட்டுள்ளது. www.catiim.in
என்ற இணையதளத்தில் கேட் பதிவு எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைப்
பயன்படுத்தி log on செய்து, தங்களின் முடிவுகளை மாணவர்கள்
அறிந்துகொள்ளலாம்.
கேட் மதிப்பெண்கள் அடிப்படையில் short list செய்யப்பட்டவர்கள்,
சம்பந்தப்பட்ட ஐஐஎம்., களிலிருந்து தொலைபேசி மூலமாக அழைக்கப்படுவர்.
மொத்தம் உள்ள 13 ஐ.ஐ.எம்.,கள் மற்றும் மேலாண்மை பயிற்றுவிக்கும் முக்கிய
கல்வி நிறுவனங்களில் சேர கேட் தேர்வு நடத்தப்படுகிறது.
CAT தேர்வில்,10 மாணவர்கள் நூறு சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவருமே ஆண்கள்.
100% சதவீத மதிப்பெண்கள் பெற்ற 10 பேரில், 9 பேர் பொறியியல்
பட்டதாரிகள். இவர்களில் எட்டு பேர் ஐஐடி மாணவர்கள். ஒரு நபர் மட்டும்,
டெல்லி பல்கலையில் அறிவியல் படிப்பு படித்தவர். 100 மதிப்பெண் பெற்ற 10
மாணவர்களில், 5 பேர், தற்போது இறுதியாண்டு பட்டப்படிப்பு படித்து
வருபவர்கள். இதுதவிர, 99.99% மதிப்பெண்களை 4 பெண்கள் பெற்றுள்ளனர். இவர்கள்
அனைவருமே, இறுதியாண்டு பொறியியல் படிப்பு படித்து வருபவர்கள்.மொத்தத்தில், 255 பெண்கள், 1,640 ஆண்கள், இந்த தேர்வில் 99
சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றுள்ளனர். பொறியியல் அல்லாத
படிப்புகளில் இருந்து கேட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு
பல்வேறு ஐ.ஐ.எம் நிறுவனங்கள் கூடுதல் புள்ளிகளை வழங்க உள்ளதாக
கூறப்படுகிறது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...