தேர்வு நேரத்தில் ஜெனரேட்டர் நிதி கேட்டு அதிகாரிகள் கடிதம்:
மார்ச் 1ம் தேதி பிளஸ் 2 தேர்வுகள் துவங்குகின்றன. மின்வெட்டை சமாளிக்க, தேர்வு மையங்களில், ஜெனரேட்டர் உபயோகத்திற்கான நிதி கேட்டு, முதன்மைக் கல்வி அலுவலர்கள், அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.
மின்வெட்டை சமாளிக்க, தேர்வு மையங்களில் ஜெனரேட்டர் பயன்படுத்த, அரசு,
ஏற்கனவே உத்தரவிட்டது. கல்வி மாவட்டம் வாரியாக, தேர்வு மையங்களை
கணக்கிட்டு, ஜெனரேட்டர் ஏற்பாடு செய்ய, பள்ளிகல்வித் துறை
உத்தரவிட்டுள்ளது.இதற்கான நிதி கேட்டு, பள்ளிக் கல்வித்துறை இயக்குனருக்கு,
முதன்மைக் கல்வி அலுவலர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.
கல்வித்துறை அலுவலர்கள் கூறுகையில், "அரசின் உத்தரவுப்படி, 10ம்
வகுப்பு, பிளஸ் 2 தேர்வு மையங்களுக்கு, ஜெனரேட்டர்களை தயார் நிலையில்
வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
கிராமப்புற மையங்களுக்கு ஜெனரேட்டர் எடுத்துச் செல்வதால், கூடுதல்
செலவாகும். பள்ளிக்கல்வித் துறையில் இருந்து நிதி வர தாமதமாகும்
பட்சத்தில், பெற்றோர் - ஆசிரியர் கழக நிதியை பயன்படுத்த அனுமதி
கேட்டுள்ளோம்" என்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...