அடிப்படை வசதிகள் இல்லாத அரசு தொடக்க பள்ளி!
பொறையூர் ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளியில், அடிப்படை வசதிகள் இன்றி மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
சித்தாமூர் ஒன்றியத்திற்குட்பட்ட பொறையூர் ஊராட்சியில், ஆதிதிராவிடர்
நலத்துறை தொடக்கப் பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளி 1.5 ஏக்கர் பரப்பளவில்
அமைந்து உள்ளது. தற்போது 60 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர் ஆகியோர் பணிபுரிகின்றனர்.
பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், பள்ளியின் முன்னாள் உள்ள விளையாட்டு
மைதானத்தில், அப்பகுதி மக்கள் கால்நடைகளை கட்டி அசுத்தம் செய்து
வருகின்றனர். மைதானப் பகுதியை, கிராம மக்கள் பொதுப்பாதையாக பயன்படுத்தி
வருகின்றனர்.
பள்ளியின் பின்புறம் முட்புதர்கள் வளர்ந்து, விஷப் பூச்சிகள் அதிகரித்து
வருகின்றன. இதனால், பள்ளி மாணவர்கள், விளையாட்டு மைதானத்தில் விளையாடவே
அஞ்சுகின்றனர். இரவு பள்ளி கட்டடம், சமூக விரோதிகளின் கூடாரமாகி வருகிறது.
அடிப்படை தேவையான குடிநீர் வசதி ஏற்படுத்தப்படவில்லை.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: பள்ளி எதிரில் விளையாட்டுத்
திடல் அமைந்துள்ளது. இங்குள்ள விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்து உள்ளன.
ஆபத்தை உணராமல், அதில் மாணவர்கள் விளையாடுகின்றனர்.
பள்ளித் தலைமை ஆசிரியர் பள்ளிக்கு முறையாக வருவதில்லை. உதவி ஆசிரியர்
மட்டுமே மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி வருகிறார். இதுகுறித்து, மேல்
அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...