வெற்றிக்கு விடாமுயற்சியும், தொடர் உழைப்பும் அவசியம்-சி.பி.ஐ. துணை கண்காணிப்பாளர் சி.ஈஸ்வரமூர்த்தி:
தேர்வில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் வெற்றி பெற
விடாமுயற்சியும் தொடர் உழைப்பும் அவசியம் என்று சி.பி.ஐ. துணை
கண்காணிப்பாளர் சி.ஈஸ்வரமூர்த்தி கூறினார்.
குரோம்பேட்டை வைஷ்ணவா கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டு தின விழாவை தொடங்கி வைத்து அவர் பேசியது:
கல்வி என்பது மாணவர்களுக்கு மட்டுமல்ல, வயது, கல்வி, பதவி வித்தியாசம்
இல்லாமல் வாழ்நாள் முழுக்க அனைவருமே மேற்கொள்ள வேண்டிய தொடர் முயற்சி.
காலங்காலமாக மாணவர்களின் அறிவாற்றலை மேம்படுத்தத் தூண்டுகோலாகத் திகழ்ந்து
வரும் அனைத்து ஆசிரியர்களும் என்றும் வணக்கத்துக்கும் போற்றுதலுக்கும்
உரியவர்கள்.
பண்டைய இந்தியாவில் மன்னர்களும், சக்ரவர்த்திகளும் தங்களுக்குக்
கல்வியும், ஞானமும் போதித்த குருவின் காலடியில் அமர்ந்து இருப்பதைக்
கெüரவமாகவும், பெருமையாகவும் கருதினர். ஆனால் தற்போது கல்வி போதிக்கும்
ஆசிரியர்களுக்கு அவ்வித மரியாதை வழங்கப்படுவதில்லை என்பது
துரதிருஷ்டமானதுதான்.
கல்வி மூலம் மாணவர்களின் அறிவாற்றல் மட்டுமன்றி, தைரியம், நேர்மை,
மதிப்பு, கெüரவம், நற்குணங்கள் ஆகியவையும் மேம்படுத்தப்பட வேண்டும்.
வாழ்க்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு சோதனைகள், ஏமாற்றங்கள்,
பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும். நாம் எதற்கும் லாயக்கில்லையோ என்றுகூட
எண்ணத் தோன்றும்.
முகம் காட்டும் கண்ணாடி சுக்குநூறாக உடைந்து சிதறினாலும்,
பிரதிபலிக்கும் இயல்பை அது இழந்து விடுவதில்லை. அதுபோன்று எந்த நிலையிலும்
உங்களது மதிப்பு மற்றும் தனித்திறனை ஒருபோதும் இழக்கக்கூடாது.
விளையாட்டை திறன் சோதிக்கும் போட்டியாகக் கருதாமல் தலைமைப்பண்பு, குழு
ஒற்றுமை, ஒழுக்கம், தொடர் முயற்சி ஆகியவற்றை மேம்படுத்தும் சிறந்த
பயிற்சியாகக் கருத வேண்டும் என்றார்.
.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...