தரம் உயரும் இந்திய தகவல் தொடர்பு கல்வி நிறுவனம்:
ஊடகத்துறை சார்ந்த கல்வியை அளித்துவரும் இந்திய தகவல் தொடர்பு கல்வி
நிறுவனம்(IIMC) தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிலையமாக தரம்
உயர்த்தப்பட இருக்கிறது.
இந்தியாவில் ஊடகத்துறை சார்ந்த கல்வியை அளிப்பதில் Indian Institute of
Mass Communication சிறந்து விளங்குகிறது. நாடு முழுவதும் 6 ஐஐஎம்சி கல்வி
நிலையங்கள் உள்ளன.
அவற்றில் வானொலி மற்றும் விளம்பரம், தொலைக்காட்சி ஊடகம்
மற்றும் அச்சு ஊடகம் ஆகிய பட்டய படிப்புகள் வழங்கப்படுகின்றன.
சிறப்பு வாய்ந்த இக்கல்வி நிலையத்தை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி
நிலையமாக (INI) தரம் உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. அநேகமாக, வரும்
பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படும் என தெரிகிறது.
ஐஎன்ஐ தரத்தினை பெற்றால், ஐஐஎம்சி யானது ஐஐடி கல்வி நிலையங்களுக்கு இணையான
அந்தஸ்திற்கு உயர்த்தப்படும்.
ஐஐஎம்சியின் 6 கல்வி நிலையங்கள் டெல்லி, தென்கனல் (ஒடிஸா), அமராவதி
(மகாராஸ்டிரா), ஐஸ்வால் (மிசோரம்), கோட்டயம் (கேரளா) மற்றும் ஜம்முவில்
இயங்கி வருகின்றன. இவற்றில் சில கல்வி நிலையங்கள் வாடகைக் கட்டிடத்தில்
இயங்கி வருகின்றன. மேலும் சொந்த கட்டிடத்தில் கல்வி நிலையம் அமைப்பதற்கு
அந்தந்த மாநில அரசுகளிடம் நிலம் பெறுவதற்கான கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் ஐஐஎம்சி, அரசுக்கு பத்திரிக்கை தொடர்பான
ஆலோசனைகளையும், உயர் அரசு அலுவலர்களுக்கு பயிற்சியும் வழங்கி வருகிறது.
ஐஎன்ஐ தரத்தினை பெற்றால் இவற்றிற்காக தனியாக நிதி ஒதுக்கப்படும்.
அதனைக்கொண்டு புதிய படிப்புகளை அறிமுகப்படுத்த முடியும். பட்டய படிப்புகளை
மட்டும் அளித்து வரும் ஐஐஎம்சி, இனி இளநிலை, முதுநிலை படிப்புகளையும்
அளிக்க முடியும்.
நாடு முழுவதும் தொலைக்காட்சி சேனல்களும், பத்திரிக்கைகளும் பெருகிவிட்ட
நிலையில் அவற்றால் ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு நீண்ட ஆய்வும்
தேவைப்படுகிறது. ஐஎன்ஐ தரம் பெற்றால் ஐஐஎம்சி மூலம் இந்திய ஊடகத்துறையின்
தரம் உயரும். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது,
"பாரளுமன்றத்தின் மூலம் மட்டுமே ஐஎன்ஐ தரம் பெற முடியும் என்பதால், தகவல்
ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தால் இதற்கான வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்டு,
மத்திய அமைச்சரவையின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது. அமைச்சரவையின்
அனுமதிக்கு பின்னர் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்" என்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...