பள்ளி மாணவர்களுக்கு 13 வகை கலவை உணவுகள் சென்னையில் தொடக்கம்:
பள்ளி மாணவர்களுக்கு 13 வகை உணவு வகைகள் வழங்கும் திட்டம் சென்னையில் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.
இது குறித்து சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பள்ளிகளில் 13 வகை கலவை சத்துணவு வழங்க தமிழக முதல்வர்
உத்தரவிட்டிருந்தார்.
இதனடிப்படையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி
பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்தத் திட்டத்தை சமூக நலம் மற்றும் சத்துணவு
திட்டத்துறை அமைச்சர் பா. வளர்மதி மற்றும் மேயர் சைதை துரைசாமி ஆகியோர்
தொடங்கி வைத்தனர்.
இந்த திட்டத்தின்படி மாதத்தின் முதல் மற்றும் இரண்டாம் வாரங்களில்
முறையே திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காய்கறி பிரியாணி மற்றும்
மிளகுத்தூள் முட்டை (திங்கள்), கொண்டைக்கடலை புலவு மற்றும் தக்காளி முட்டை
மசாலா (செவ்வாய்), தக்காளி சாதம் மற்றும் மிளகுத்தூள் முட்டை (புதன்),
சாம்பார் சாதம் மற்றும் வேகவைத்த முட்டை (வியாழன்), கருவேப்பிலை சாதம்
அல்லது கீரை சாதம் மற்றும் முட்டை மசாலா (வெள்ளி) ஆகியவை வழங்கப்படும்.
மூன்றாம் மற்றும் நான்காம் வாரங்களில் முறையே திங்கள் முதல்
வெள்ளிக்கிழமை வரை சாம்பார் சாதம் மற்றும் வெங்காயம், தக்காளி முட்டை மசாலா
(திங்கள்), மீல் மேக்கர் - காய்கறி கலவை சாதம் மற்றும் மிளகுத்தூள் முட்டை
(செவ்வாய்), புளியோதரை மற்றும் தக்காளி முட்டை மசாலா (புதன்), எலுமிச்சை
சாதம், தக்காளி முட்டை மசாலா மற்றும் சுண்டல் (வியாழன்), சாதம், சாம்பார்,
வேகவைத்த முட்டை மற்றும் உருளைக்கிழங்கு பொரியல் (வெள்ளி) ஆகியவை
வழங்கப்படும்.
இந்தப் புதிய திட்டம் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு வட்டம் என 32 வட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தொடக்க நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர், சமூக நலம்
மற்றும் சத்துணவு திட்டத்துறை செயலர் பஷீர் அகமது, தியாகராய நகர்
சட்டப்பேரவை உறுப்பினர் வி.பி. கலைராஜன், துணை மேயர் பா. பெஞ்சமின்,
மாநகராட்சி இணை ஆணையர் தி.ந. வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...