14 பிளஸ் 2 மாணவிகளுக்கு நேரடியாக கனடா யார்க் பல்கலையில் அட்மிஷன்:
திருச்செங்கோடு வித்யா விகாஸ் பெண்கள்
மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 எழுதியுள்ள மாணவிகள்14 பேருக்கு பொறியியல்
உள்ளிட்ட வகுப்புகளுக்கு நேரடியாக கனடா நாடடில் உள்ள யார்க் பல்கலைக்கழகம்
அடமிஷன் வழங்கியது.
இதற்கான விழா வித்யா விகாஸ் பொறியியல் மறறும் தொழில் நுட்ப கல்லூரியில்
வெள்ளிக்கிழமை நடந்தது. வித்யா விகாஸ் கல்வி நிறுவனங்களின் செயலர்
டாக்டர் எஸ்.குணசேகரன் தலைமை வகித்தார். பெண்கள் மேல்நிலைப் பள்ளி
முதல்வர் அமுதா வரவேற்றார். விழாவில் யார்க் பல்கலைக்கழக சர்வதேச
மாணவர்கள் சேர்க்கைகான அதிகாரி மேரி லா ரோஸ் மற்றும் ஆலோசகர் ஜிவி சங்கர்
ஆகியோர் கலந்து கொண்டனர்.விழாவில் மேரி லா ரோஸ் பேசியது.:- யார்க்
பல்கலைக் கழகம் ஒரு குளோபல் பல்கலைக்கழகமாகும். உலகில் உள்ள மூன்றாவது
பெரிய பல்கலைக்கழகம் யார்க் பல்கலைக்கழகமாகும். இங்கு பல்வேறு
கலாச்சாரங்களைக் கொண்ட 60 ஆயிரம் மாணவ மாணவிகள் பயில்கின்றனர். 20 க்கு
மேற்பட்ட மொழிகள் இங்கு கற்றுத்தரப்படுகின்றன. 4 சர்வதேச பட்டங்கள்
வழங்கப்படுகின்றன. 155 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கு படிக்கின்றனர். கனடா
நாட்டிலேயே முதல்நிலையில் இருக்கு்ம் மேலாண் கல்லூரி இஙகுள்ளது.
வெளிநாட்டு மாணவர்கள் இங்கு வந்து கல்வி பயில்வதற்காக ஆண்டிற்கு 5
மில்லியன் டாலர்கள் கல்வி உதவித் தொகையாக அளிக்கப்படுகிறது. யார்க்
பல்கலைக்கழகம அமைந்துள்ள டொராண்டோ அமெரிக்காவில் உள்ள பெரிய நகரங்களில்
ஒன்றாகும். வசிப்பதற்கு ஏற்ற சிறந்த இடம் டொராண்டோ ஆகும். இங்கு படிக்கும்
மாணவ மணவிகள் பல்கலைக்கழகத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பகுதி நேர வேலை
பார்த்து தங்கள் கல்விச் செலவுகளை சமாளித்துக் கொள்ளலாம். இந்தியாவிற்கு
வருவது இதுதான் முதல்தடவை எனறார் அவர்.
பிள்ஸ் 2 தேர்வு எழுதியுளளஅ 14 மாணவிகலுக்கு அவர் சேர்க்கைக்கான
உத்தரவுகளை வழங்கினார். யார்க் பல்கலைக் கழகத்தின் கல்விஆலோசகரான ஜிவி
சங்கர் பேசுகையில் வருடத்திர்கு மாணவருக்கு ரூ 15 லட்சம் செலவாகும்
என்றாலும் மாணவர்கள் பகுதி நேர வேலை பார்த்தும், பல்கலைக்கழகம தரும் கல்வி
உதவித்தொகைகளைப் பெற்றும் எளிதாக படிப்பை முடிக்கலாம் என்றார். விழாவில்
மேரி லா ரோஸ் 14 மாணவிகளுக்கு சேர்க்கைக்கான உத்தரவுகளை வழஙகினார்.
விழாவில் மேலாண் இயக்குனர் எம்.முத்துசாமி, இயக்குனர் டிபி ஞானசேகர்,
வெற்றி விகாஸ் தாளாளர் வெற்றிச்செல்வன், வித்யா விகாஸ் பொறியியல் கல்லூரி
முதல்வர் டாக்டர் சுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பெற்றோர்களும்,
மாணவ மாணவிகளும் திரளாகக் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...