பிளஸ் 2 முதன்மைத் தேர்வுகளை கண்காணிக்க 4,000 பேர்!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்து வரும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், மொழிப்பாடங்களில், 43 மாணவர்கள், "பிட்" அடித்து பிடிபட்டனர்.இதையடுத்து, இன்று முதல் துவங்கும் முதன்மை தேர்வுகளில் மாணவர்களின் முறைகேடுகளை கண்டறிய, பறக்கும் படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். முறைகேடுகள் கண்டறியும் பட்சத்தில், அறை கண்காணிப்பாளர் மீது, விசாரணை நடத்தவும், அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில், கடந்த, 1ம் தேதி துவங்கிய
பிளஸ் 2 பொதுத் தேர்வு, வரும், 27ம் தேதி நிறைவடைகிறது. மொத்தம், 5,769
பள்ளிகளிலிருந்து, 8 லட்சத்து 4,538 மாணவ மாணவியர், 2,020 மையங்களில்
தேர்வெழுதுகின்றனர்; இதில், 48,788 தனித்தேர்வர்கள். தேர்வில் முறைகேடுகளை
கட்டுப்படுத்த, ஆள் மாறாட்டம் செய்வோர், ஆயுள் முழுவதும் தேர்வு எழுத
முடியாது என, அரசு தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்து, தண்டனையை
கடுமையாக்கியுள்ளது.
இருப்பினும், மற்றவர்களை பார்த்து எழுதுதல், விடைத்தாளை மாற்றி
எழுதுதல், "பிட்" எழுதி செல்லுதல் உள்ளிட்ட, பல்வேறு முறைகேடுகள் நடந்த
வண்ணம் உள்ளன.
இந்நிலையில்,இன்று முதல், வரும், 27ம் தேதி வரை, செய்முறை மற்றும்
செய்முறை இல்லா முக்கிய தேர்வுகள் நடப்பதால், முறைகேடுகள் அதிகரிக்க
வாய்ப்புள்ளது. இதனால், மாநிலம் முழுவதும், மாணவர்களை தீவிரமாக
கண்காணிக்கவும், முறைகேடுகளை கண்டறியவும், 4,000க்கும் மேற்பட்ட பறக்கும்
படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அறை கண்காணிப்பாளர்களுக்கும் போதுமான
அறிவுரை வழங்கப்பட்டுள்ளன.
பறக்கும் படை உறுப்பினர் ஒருவர் கூறியதாவது: மொழித் தேர்விலும் கூட,
பிட் அடித்து மாணவர்கள் பிடிபட்டுள்ள நிலையில், முக்கிய தேர்வுகளில், அதிக
மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபட வாய்ப்புள்ளது. எனவே, கண்காணிப்பை
தீவிரப்படுத்த பறக்கும்படையினருக்கும், அறை கண்காணிப்பாளருக்கும்
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அறை கண்காணிப்பாளர் அல்லது பறக்கும் படையினரால், முறைகேடு கண்டறியும்
பட்சத்தில், அறை கண்காணிப்பாளர் மீது, விசாரணை நடத்த வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். பறக்கும் படையினரிடம், முறைகேடு செய்யும் மாணவர்கள்
பிடிபட்டால், அறை கண்காணிப்பாளர் மீதும், நடவடிக்கை பாயும் என்பதால்,
சோதனையை தீவிரப்படுத்தவும் வாய்ப்புள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...