விழுப்புரத்தில் மாற்றுத் திறனாளிகள் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை துவக்கம்:
விழுப்புரம் செயின்ட் ஜான் மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது.
விழுப்புரம் மந்தக்கரை புதுத்தெரு பகுதியில் உள்ள செயின்ட்
ஜான் மாற்றுதிறனாளிகள் மேல்நிலை பள்ளியில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு
வரை
மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது. இந்த பள்ளியில் கை, கால் ஊனம்,
காதுகேளாதோர், வாய்பேச முடியாதவர், மனவளர்ச்சி குன்றியோர், ஆதரவற்ற
சிறுவர்கள், சிறுமியர்கள், பெற்றோர்கள் இருந்தும் படிக்க முடியாமல் வறுமை
கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் பிள்ளைகளுக்கு சேர்க்கை நடக்கிறது.இங்கு
கல்வி, புத்தகம், உணவு, உடைகள், தங்கு மிடம் இலவசமாக வழங்கப்படுகிறது. அது
மட்டுமின்றி படிக்கும் காலத்தில் தையல், தட்டச்சு, கணினி பயிற்சிகளும்
இலவசமாக அளிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...