சிலம்பத்தில் அரசு பள்ளி மாணவர் சாதனை:
திருத்தங்கல் எஸ்.ஆர்., அரசு மேல்நிலைப்பள்ளி ஆறாம் வகுப்பு மாணவர், சிலம்பத்தில் பதக்கங்களை குவித்துள்ளார்.திருத்தங்கல் எஸ்.ஆர்., அரசு மேல்நிலைப்பள்ளி ஆறாம் வகுப்பு மாணவர் கருக்குவேல்ராஜா,12. இவர், மகாராஷ்டிரா நவி மும்பையில் 2012-2013ம் ஆண்டிற்கான, தேசிய சிலம்பம் போட்டியில் பங்கேற்றார்.
14-17 வயது பிரிவு சப் ஜூனியர் 30 கிலோ எடை பிரிவு, தனித்திறன் போட்டியான ஒற்றை கம்பு சுற்றுதலில் தங்கம் வென்றார். சுருள்வாள் வீச்சில் வெள்ளி, வாள்வீச்சில் வெண்கல பதக்கங்களை வென்றார்.
2012ல் கன்னியாகுமரியில் நடந்த நேஷனல் சிலம்பம்
சாம்பியன்சிப் போட்டியில், கம்பு சண்டையில் தங்கம், வாள்வீச்சில் வெண்கலம்,
இரட்டை கம்பு சுற்றலில் வெள்ளி, ஒற்றை கம்பு சுற்றலில் வெண்கல பதக்கங்களை
குவித்துள்ளார். இதை தொடர்ந்து, மே மாதம் மலேசியாவில் நடைபெற உள்ள சிலம்பம்
போட்டியில் கலந்து கொள்கிறார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...