தமிழக அரசின் இளநிலை உதவியாளர் பணிக்கான
563 பணி நாடுநர்களுக்கு அந்தந்த மாவட்டத்தில் காலியாக உள்ள
பணியிடங்களுக்கான கலந்தாய்வு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெற
உள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
மூலம் குரூப் நான்கின் கீழ் பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடூ பெறப்பட்ட
இந்த பணியிடக் கலந்தாய்வு ஏப்ரல் 25-ஆம் தேதி காலை 10 மணிக்கு
தொடங்குகிறது. போதுமான காலிப் பணியிடம் இல்லாததால், சொந்த மாவட்டங்களில்
பணி கிடைக்காதவர்கள் மற்றும் வேறு மாவட்டங்களில் பணிபுரிய விருப்பம்
உள்ளவர்களுக்கும், பிற்பகலில் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு தெரிவு
செய்யப்பட்டு, பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு பெறப்பட்ட தேர்வாளர்கள்
அவர்களது இருப்பிட முகவரியில் உள்ள மாவட்டட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு
ஏப்ரல் 25-ஆம் தேதியன்று காலை 9 மணிக்கு தவறாமல் வருகை தருமாறு
தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...