நூலகங்களை இணைய தளம் மூலம் இணைக்கும் நூலக இணைப்பு எனும் புரட்சி:
அறிவுப் பொக்கிஷங்களை தன்னகத்தே
வைத்திருக்கும் முக்கியமான நூலகங்களை இணைய தளம் மூலம் இணைக்கும் முறை, உலக
அளவில் பிரபலமாகி வருகிறது. அந்த வகையில், டெல்லியை மையமாகக் கொண்டு
செயல்பட்டு வரும் DELNET என்ற தொண்டு நிறுவனம், திருச்சியில் நடத்திய
கருத்தரங்கில், நூலகங்கள் இணைப்பு குறித்த பல அரிய தகவல்களைப் பகிர்ந்து
கொண்டது.
நூலக இணைப்பு எனும் புரட்சி:
நூலகங்களை இணைய தளம் மூலம் இணைப்பதன் மூலம்,
உலகின் ஒரு மூலையில் இருக்கும் வாசகர், மறுமூலையில் இருக்கும்
புத்தகங்களைக்கூட படிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இந்த நவீன முறை குறித்து
டெல்லியைச் சேர்ந்த டெல்நெட் என்ற தனியார் நிறுவனம் திருச்சி என்.ஐ.டியில்
நடத்திய கருத்தரங்கில், தமிழகத்தின் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த
நூலகர்கள் கலந்து கொண்டனர். உலக அளவில் நூலகங்களை இணைப்பதன் மூலம்
வாசகர்களுக்குக் கிடைக்கும் பயன்கள் குறித்து பல தகவல்களைத்
தெரிந்துகொண்டதாக நூலகர்கள் தெரிவித்தனர்.
ஒரே தளத்தில் 4,600 நூலகங்கள்:
தனியார் தொண்டு நிறுவனமான டெல்நெட் உலக
அளவில் 4,600 நூலகங்களை இணைத்திருக்கிறது. இந்தியாவில் அதிகபட்சமாக
ஆந்திராவைச் சேர்ந்த 900 நூலகங்களும், தமிழகத்தைச் சேர்ந்த 687 நூலகங்களும்
இதன் நெட்வொர்க்கில் இணைந்திருக்கின்றன. இந்த நூலக இணைப்பின் மூலம்
1,75,00,000 புத்தகங்கள் மையப்படுத்தப்பட்டு, உலக எந்த மூலையில் இருந்தும்,
எந்தப் புத்தகத்தையும் வாசிக்க முடியும் என்ற நிலையை உருவாக்கி இருக்கிறது
டெல்நெட். இந்த நெட்வொர்க்கில் ஒரு நூலகம் இணைவதற்கு வெறும் 11,000 ரூபாய்
செலுத்தினால் போதுமானது.
"அமெரிக்கா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ்,
இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளில் எங்களுக்கு நூலகங்கள் உள்ளன. நூலக வசதிகளை
பிரிட்டன் அரசு எங்களுடன் பகிர்ந்து கொள்கிறது. சர்வதேச மென்பொருட்களை
Open Source மூலம் தர முயற்சிக்கிறோம். இதுபோன்ற கருத்தரங்குகளில்
மென்பொருட்களை இலவசமாகத் தருகிறோம்" என டெல்நெட்-டின் நெட்வொர்க் மேனேஜர்
டாக்டர் சங்கீதா கூறினார்.
நூலக நிர்வாகத்தில் தொழில்நுட்பம்:
டெல்நெட்டின் இணைப்பில் இணைந்துள்ள திருச்சி
என்.ஐ.டியின் மைய நூலகம், தொழில்நுட்பம் சார்ந்த 1,19,000 புத்தகங்கள்,
4,500 சஞ்சிகைகள், 3,000 காணொளி நூல்களைக் கொண்டிருக்கிறது. அதிநவீன
தொழில்நுட்பம் மூலம் நூலக நிர்வாகத்தில் புதிய முயற்சிகளையும் செய்கிறது
திருச்சி என்.ஐ.டி.
தடைக்கல்லைத் தாண்டும் தமிழ்:
மத்திய அரசு கல்வி நிறுவன நூலகங்களில் இந்தி மற்றும் சமஸ்கிருத புத்தகங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம், தமிழ் புத்தகங்களுக்குத் தரப்படுவதில்லை என்ற கருத்தும் பரவலாக நிலவுகிறது. இந்தத் தடைக்கல்லை தமிழ் நூல்கள் தாண்டுவதற்கு நூலக இணைப்பு பேருதவி புரியும் என்பதில் ஐயமில்லை
மத்திய அரசு கல்வி நிறுவன நூலகங்களில் இந்தி மற்றும் சமஸ்கிருத புத்தகங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம், தமிழ் புத்தகங்களுக்குத் தரப்படுவதில்லை என்ற கருத்தும் பரவலாக நிலவுகிறது. இந்தத் தடைக்கல்லை தமிழ் நூல்கள் தாண்டுவதற்கு நூலக இணைப்பு பேருதவி புரியும் என்பதில் ஐயமில்லை
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...