சென்னைப் பல்கலை முதுகலை தேர்வு: விண்ணப்பிக்க 29ம் தேதி கடைசி நாள்:
சென்னைப் பல்கலை தொலை நிலை கல்வியில் வழங்கப்படும், முதுகலை பட்ட படிப்பு தேர்வுக்கு, வரும், 29ம் தேதிக்குள், விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலை கல்வி நிறுவனம்
வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னைப் பல்கலைக்கழகத்தில், தொலை நிலை கல்வியில்
வழங்கப்படும், எம்.ஏ., எம்.காம்., எம்.எஸ்சி., உள்ளிட்ட முதுகலை
படிப்புகளுக்கு, ஜூன் மாதத்தில் தேர்வுகள் நடக்க உள்ளன. இத்தேர்வுகளுக்கு,
வரும் 29ம் தேதிக்குள் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க
தவறிய மாணவர்கள், அபராத கட்டணத்துடன், மே 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப படிவங்களை, www.ideunom.ac.in
என்ற பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஜூன்
8ம் தேதி முதல், முதுகலை பட்ட படிப்புகளுக்கான தேர்வுகள் துவங்குகின்றன.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...