நூலகர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்:
நூலகத் துறையில் உள்ள, 1,000 மூன்றாம் நிலை நூலகர் காலி பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என, தமிழ்நாடு நூலகர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சென்னையில், நிருபர்களிடம் சங்க பொதுச்செயலர் முத்துசாமி
கூறியதாவது: நூலகத் துறையில், பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. காலி பணியிடங்களை
நிரப்பாமல், தினக்கூலி பணியாளர்களை நியமிக்கின்றனர். கன்னிமாரா பொது
நூலகத்தில் மட்டும், அதிகமான, நூலகர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
நூலகத் துறையில், முதுகலை பட்டப் படிப்பு படித்தவரை,
இயக்குனராக நியமிக்க வேண்டும். கல்வித் துறையில் இருந்தே, தொடர்ந்து,
இயக்குனரை நியமிக்கின்றனர். பெரும்பாலும், கூடுதல் பொறுப்பு நிலையிலேயே,
நூலகத்துறை இயக்குனர் பணியிடம் உள்ளது.
இந்த நிலையை மாற்றி, நூலகத் துறைக்கு என, தகுதி வாய்ந்த அதிகாரியை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...