மத்திய கட்டட ஆராய்ச்சி கல்வி நிறுவனம்:
ஒரு துறையில் நிபுணத்துவம் பெற, அத்துறை சார்ந்த பிரத்யேக கல்வி நிறுவனங்களில் கற்க வேண்டும். அவ்வாறு கற்கும் போது சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள், வளங்கள், ஆராய்ச்சி ஈடுபாடு, நேரடி அனுபவம் போன்றவை எளிதாக கிடைக்கிறது.
இந்தியாவில் இது போன்ற படிப்புகளுக்கு, தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. வெளியுலகத்திற்கு அதிகம் தெரியாமல், சாதித்து வரும் அத்தகைய கல்வி நிறுவனங்களில் கட்டணமும் குறைவு, வேலை வாய்ப்புகள் அதிகம்.
அப்படிப்பட்ட நிறுவனங்களில் ஒன்றுதான் "மத்திய கட்டட ஆராய்ச்சி நிறுவனம்" (சி.பி.ஆர்.ஐ.,)
கட்டடக் கலை அறிவியலில், மேம்பாடு, தொழில்நுட்பம், தொழில் திறன் ஆகியவற்றை புகுத்துவது போன்றவை இங்கு கற்றுத் தரப்படுகின்றன.
இந்நிறுவனம் உத்தரகண்ட் மாநிலம், ரூர்க்கியில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் உள்நாடு, வெளிநாட்டு அளவில் பெரிய அமைப்புகளுடன் ஒப்பந்தம் மேற்க்கொண்டுள்ளது.
இங்கு பலவிதமான ஆராய்ச்சி பிரிவில் பல்வேறு படிப்புகள் வழங்கப்படுகின்றன. உள்கட்டமைப்பு மற்றும் பேரிடர் குறைப்பு என்ற பெயரில் இரண்டாண்டு முதுகலை படிப்பும் வழங்குப்படுகிறது. இன்ஜினியர்கள், கட்டடக்கலை நிபுணர், கைவினைஞர்கள் மற்றும் நிர்வாகிகள் போன்றவர்களுக்கு பல்வேறு பயிற்சி படிப்புகளும் வழங்கப்படுகின்றன.
மேலும் இந்நிறுவனம் பற்றிய தகவல்களை www.cbri.res.in என்ற இணையதள முகவரியில் பெறலாம்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...