கோவை அண்ணா பல்கலைக்கழகத்தில் நான்காம் பருவத் தேர்வில் 99 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெறவில்லை:
கோவை அண்ணா பல்கலைக்கழகத்தில் நான்காம்
பருவத் தேர்வு எழுதிய, பகுதி நேர பொறியியல் பட்டப்படிப்பு மாணவர்களில் 99
சதவிகிதம் பேர் தேர்ச்சி பெறவில்லை. ஒட்டுமொத்தமாக இத்தனை பேர் தேர்ச்சி
பெறாதது மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி
இருக்கிறது.
நான்காம் பருவத் தேர்வு முடிவில் குளறுபடி : ஒருசிலர் மட்டுமே தேர்ச்சி
2007-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கோவை அண்ணா
பல்கலைக்கழகத்தில் 2200 மாணவர்கள் படித்துவருகிறார்கள். இந்த
பல்கலைக்கழகத்தின் அனைத்து அதிகாரங்களும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு
உட்பட்டவையே. இந்த பல்கலைக்கழகத்தில் பணிக்கு செல்வோரின் நலனுக்காக மாலை
நேர பொறியியல் பட்டப்படிப்புகளும் இருக்கின்றன. இதில் 700-க்கும்
அதிகமானவர்கள் படித்து வருகிறார்கள். கடந்த 2012 நவம்பர், டிசம்பர்
மாதங்களில் 4-ஆம் பருவத் தேர்வு எழுதிய இவர்களில் ஒருசிலர் மட்டுமே
தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.
விடை புரியாத தேர்வு முடிவுகள்:
நான்காம் பருவத் தேர்வில் வழங்கப்பட்ட
வினாத்தாளில் இருந்த கேள்விகள் பாடத்தோடு தொடர்பில்லாமல் இருந்தது பற்றி
மாணவர்கள் ஏற்கனவே புகார் தெரிவித்திருந்தனர்.. இப்போது தேர்வு முடிவுகளில்
நிலவும் குளறுபடி அவர்களை குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
13 பாடப்பிரிவுகளிலும் தோல்வி : ஐந்தாம் பருவத் தேர்வு அறிவிப்பு:
ஓரிரு பிரிவுகளில் மட்டுமின்றி மொத்தமாக 13
பாடப்பிரிவுகளிலும் இதேபோல குழப்பமே நீடிக்கிறது. தேர்ச்சி குளறுபடி
குறித்து கடந்த மார்ச் 12 ஆம் தேதி மாணவர்கள் கூட்டாக புகார் அளித்துள்ள
நிலையில் அதற்கு இதுவரை பதில் எதுவும் கிடைக்கவில்லை.. இந்த சூழலில் 5 ஆம்
பருவத்திற்கான தேர்வு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
"முடிவு சென்னை அண்ணா பல்கலை.யிடம்...":
பகுதிநேர மாணவர்களின் நான்காம் பருவத்
தேர்வு முடிவுகளில் நிலவும் குழப்பம் குறித்து கோவை அண்ணா பல்கலைக்கழக
மண்டல இயக்குநர் ராஜமாணிக்கத்திடம் கேட்டபோது, தேர்வு முடிவுகள்
வெளியீட்டில் தவறுகள் ஏற்பட்டிருக்கலாம். இதுபற்றி மாணவ மாணவிகள் புகார்
அளித்திருப்பதாகவும் அனைத்து அதிகாரங்களும் சென்னை அண்ணா
பல்கலைக்கழத்திற்கே இருப்பதால் முறைப்படி தகவல் அனுப்பி இருப்பதாகவும்
ராஜமாணிக்கம் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...