நியுசிலந்தில் படிப்பதற்கான கல்வி முகாம் சென்னையில் நடைப்பெற்றது:
பள்ளிப் பொதுத் தேர்வுகள் இறுதிக்
கட்டத்தை அடைந்து வரும் நிலையில், வெளிநாடுகளில் உயர் கல்வி பயில்வதற்கு
வழிகாட்டும் கல்வி முகாம்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. IDP என்ற
வெளிநாட்டுக் கல்வி மையம் நடத்திய கல்வி முகாமின் மூலம் அமெரிக்கா, லண்டன்,
ஆஸ்திரேலியா, இத்தலி வரிசையில் நியூசிலந்தும் இணைந்துள்ளது.
உதவித்தொகையுடன் உயர் கல்வி:
வெளிநாடுகளுக்கு பறந்து சென்று தங்களது உயர்
கல்வியை பயில வேண்டும் என்பது பலரது கனவாக உள்ளது. அந்தக் கனவை நனவாக்கும்
வழியை எளிதாக்க வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு
கல்வி முகாம்களை நடத்தி வருகின்றன. அந்த வகையில் நியூசிலந்து நாட்டுப்
பல்கலைக் கழகங்கள் நடத்திய கல்வி முகாமில் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
வெளிநாட்டு மாணவர்களுக்கு ஏழாயிரம் டாலர் முதல் பத்தாயிரம் டாலர் வரை
உதவித் தொகையும் தருகிறது நியூசிலந்து. அந்நாட்டில் வாழ்வதற்கான செலவும்
மிகக் குறைவாக இருப்பதும் தங்களுக்கு எளிதாக இருப்பதாகக் கூறுகின்றனர்
மாணவர்கள்.
சிறிய நாடான நியூசிலந்தில் எட்டுப்
பல்கலைக் கழகங்கள் மட்டுமே இருந்தாலும் அனைத்தும் அரசுப் பல்கலைக்
கழகங்களே. தங்களது நாட்டிற்கு இந்த எட்டு மட்டுமே போதுமானது என்பதால்
தனியார் பல்கலைக் கழகங்களுக்கு இந்நாடு அனுமதி அளிக்கவில்லை. அதோடு
மாணவர்களின் பாதுகாப்பிற்காக Code of Conduct என்ற முறையை கையாள்கிறது
நியூசிலந்து. இதன் மூலம் மாணவர்களை இந்நாட்டிற்கு கல்வி பயில அனுப்பும்
ஏஜண்டுகள் மாணவர்களின் நலனை கருத்தில் கொள்ளவில்லை எனில், ஏஜண்டுகளின்
அங்கீகாரம் உடனடியாக ரத்து செய்யப்படுகிறது. மேலும், பல விஷயங்களில்
நியூசிலந்து நாடு தனிச் சிறப்புப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்
பல்கலைக் கழக பிரதிநிதிகள்.
நியுசிலந்தில் பொதுத்துறை நிதியில்
இயங்கும் 24 பல்கலைக்கழகங்கள் உள்ளன. மேலும் தரமான கல்வி வழங்கும் தனியார்
கல்வி நிறுவனங்களும் உள்ளன. உலகிலேயே வெளிநாட்டு மாணவர்களின் நலனுக்காக
நடத்தை விதிமுறைகளை முதன் முதலாக உருவாக்கிய நாடு நியுசிலந்து தான்.
எம்பிஎம் படிப்பின் முதல் ஆண்டை
முடித்தவுடன் மாணவர்களுக்கு 10,000 டாலர் அமெரிக்க டாலர்கள் மாணவர்களுக்கு
உதவித்தொகையாக கிடைக்கும். இரண்டாம் ஆண்டு இளநிலைப் படிப்பவர்களுக்கு
கல்விக் கட்டணத்தில் 15 % உதவித்தொகை அளிக்கப்படும். போதிய வசதிகளுடன்
மாணவர்கள் வசிப்பதற்கு தேவையான உதவித்தொகையை வழங்கபடுகிறது.
நியூசிலந்து நாட்டு பல்கலைக் கழகங்கள் பல
தனிச்சிறப்புகளைப் பெற்றிருந்தாலும் அந்நாட்டுக் குடியுரிமை அலுவலகம்
இந்தியாவில் மும்பை மற்றும் புது தில்லியில் மட்டுமே உள்ளன என்பது ஒரு
குறையே. அங்கு கல்வி பெற விரும்புவோர் தங்களது சந்தேகங்களை
www.educationnz.govt.nz என்ற இணைய தளத்தில் கண்டு தெளிவுபடுத்திக்
கொள்ளலாம்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...