பட்டதாரிகள் தொழில் தொடங்க முன்வரவேண்டும்: மத்திய அமைச்சர் பேச்சு:
பட்டம் பெற்றவர்கள் தொழில் தொடங்க முன்வர வேண்டும்" என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பல்லம் ராஜூ பேசினார்.மதுரை பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி பட்டமளிப்பு விழா செயலாளர் விஜயராகவன் தலைமையில் நடந்தது. மத்திய அமைச்சர் பல்லம் ராஜூ, பட்டங்கள் வழங்கி பேசியதாவது:
நாட்டின் வளர்ச்சிக்கு உயர்கல்வி மிக அவசியம். இந்தியாவில்
23 கோடி குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்கின்றனர். இது 96 சதவீதம்தான்.
விரைவில் அது 100 சதவீதத்தை எட்டிவிடும். இந்தியாவில் உயர்கல்வியின்
வளர்ச்சி 18.8 சதவீதம் மட்டுமே. இந்த ஆண்டு 30 சதவீதமாக உயர்த்த
திட்டமிட்டுள்ளோம்.
தொழில் சார்ந்த கல்வி அவசியம். போட்டிகள் நிறைந்த
இவ்வுலகில் மாணவர்கள் தொழில்நுட்ப திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
பட்டம் பெற்றவுடன் பிறரிடம் வேலைக்கு செல்வதை தவிர்த்து, தொழில் தொடங்கி
பலருக்கு வேலை கொடுக்க முன்வரவேண்டும். நாட்டின் பொருளாதாரம் விரைவான
வளர்ச்சிக்கு உதவும், என்றார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...