"சென்னை நேரு விளையாட்டு மைதான விடுதில் சேர விண்ணப்பிக்கலாம்"
"சென்னை நேரு விளையாட்டு மைதான விடுதில் சேர விண்ணப்பிக்கலாம்" என, கலெக்டர் ஜெயந்தி கூறினார்.
அவர் வெளியிட்ட அறிக்கை: விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
சார்பில் சென்னையில் நேரு விளையாட்டு மைதானத்தில் மாணவர்களுக்கும்,
அங்குள்ள உள் விளையாட்டு அரங்கில் மாணவிகளுக்கு விடுதிகள் செயல்பட்டு
வருகிறது. இதில், 2013-14 ஆண்டுக்கு மாணவர்கள் சேர்க்கை நடக்கவுள்ளது.
தடகளம், கூடைப்பந்து, குத்துச்சண்டை, வாலிபால், டேக்வாண்டோ
ஆகிய விளையாட்டுகளை சேர்ந்தவர்கள், தங்க அனுமதி வழங்கப்படும். தடகளம்,
கால்பந்து, வாலிபால் ஆகிய விளையாட்டுகளுக்கு மாநில அளவிலான தேர்வு
நடக்கிறது. இதற்கு ப்ளஸ் 2 மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு
அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பங்கள் வரும் 9ம் தேதிக்குள் அலுவலர் ஜவஹர்லால் நேரு
விளையாட்டரங்கம், பெரியமேடு சென்னை என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இதுமட்டுமல்லாது சிறப்பு விளையாட்டு விடுதிக்கான தேர்வு நேரு விளையாட்டு
மைதானத்தில், வரும் 10ம் தேதி காலை 8 மணிக்கு நடக்கிறது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...