வகுப்பறை போர்க்களமாக மாறாதிருக்க ஆசிரியர்களின் அறிவுரைகள் அவசியம்: துணைவேந்தர் பேச்சு:
வகுப்பறைகள் போர்க்களமாக மாறாமல் இருக்க வேண்டுமெனில், ஆசிரியர்களின் அறிவுரைகள் அவசியம், என பட்டமளிப்பு விழாவில், ஆசிரியர் பல்கலை துணைவேந்தர் விஸ்வநாதன் பேசினார்.
குள்ளப்பகவுண்டன்பட்டி ராமகிருஷ்ணன் சந்திரா கல்வியல்
கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில், சென்னை ஆசிரியர் பல்கலை துணை வேந்தர்
விஸ்வநாதன், மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:
ஆசிரியர்களாக உருவாக உள்ள மாணவிகளை எதிர்நோக்கி பல்வேறு
சவால்கள் உள்ளன. சமுதாயத்தில் மதிக்கப்படுகின்ற பொறுப்பு
ஆசிரியர்களிடத்தில் உள்ளது. இதை உணர்ந்து தற்போது பட்டம் பெறும் மாணவிகள்
செயல்பட வேண்டும். தமிழகத்தில், ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தேவை அதிகரித்து
வருகிறது.
இத்தகைய சூழ்நிலை இருந்தாலும், படிக்காதவர்களின்
எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டுதான் உள்ளது. அதற்கு காரணம் சில
பெற்றோர்கள்தான். இதை மாற்ற கட்டாயக் கல்வியை அமல்படுத்த, ஆசிரியர்கள்
பாடுபட வேண்டும்" என்றார். திண்டுக்கல் டி.ஐ.ஜி., அறிவுசெல்வம் உட்பட பலர்
பேசினர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...