மாணவர்கள் தங்களது திறமைகளை வளர்க்க வேண்டும்:
"மாணவர்கள் தங்களது திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும்," என காமராஜ் பல்கலை., பதிவாளர் கே.பிச்சுமணி கூறினார். சிவகாசி காளீஸ்வரி கல்லூரி ஆண்டு விழாவில் அவர் பசியதாவது:உலகமயமாக்கல் சூழ்நிலையில் மாணவர்கள் உயர்கல்வி பெறுவது மிகவும் அவசியம். இன்றைய நவீன அறிவியல் வசதியால், லேப் டாப்பில் ஆராய்ந்து நமக்கு தேவையான அறிவை பெற முடிகிறது. இன்றைய சூழ்நிலையில் மாணவர்கள் சராசரியாக 5 மணிநேரம் மொபைல் போன், இன்டர்நெட், டிவி.,யில் நேரத்தை செலவிடுகின்றனர். பல்வேறு பொது விசயங்கள் தெரிந்து கொள்கின்றனர்.
21ம் நூற்றாண்டில் தொழில்நுட்ப புரட்சி ஏற்படும். இந்திய
மாணவர்கள் விண்வெளி ஆராய்ச்சி, தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்த
விளங்குகின்றனர். மாணவர்கள் முன்னேறுவதற்கு ஏராளமான வாய்ப்புகள் உருவாகி
உள்ளது.
தனித்திறனை வளர்க்க வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டே
இருக்க வேண்டும். கற்பது வகுப்பறையோடு முடிந்து விடுவதில்லை. கடினமாக
உழைத்தால் நிச்சயம் முன்னேறலாம், என்றார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...