பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி குறைவு: டி.இ.ஓ., அலுவலகம் முற்றுகை:
பிளஸ் 2 தேர்வில், அரசு பள்ளிகளில், தேர்ச்சி சதவீதம் குறைவுக்கு
காரணமான, ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, டி.இ.ஓ.,
அலுவலகத்தை முற்றுகையிட்ட, 25 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில்,
பிளஸ் 2 தேர்வில், தேர்ச்சி சதவீதம் குறைவுக்கு ஆசியர்களே காரணம் ஆவர்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி, மாணவர்களின்
கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் சார்பில், நேற்று விருத்தாசலம் டி.இ.ஓ.,
அலுவலகம் முன், முற்றுகை போராட்டம் நடக்கும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, மனித உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜி
தலைமையில் ஊர்வலமாக வந்து, விருத்தாசலம் மாவட்ட கல்வி அலுவலகத்தை
முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். மாணவர் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்
தலைவர் வெங்கடேசன், செயலர் செந்தாரைக்கந்தன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
போலீசார், முற்றுகையிட்ட, 25 பேரை கைது செய்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...