மருத்துவ படிப்பு: 31 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை:
மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கு, நேற்று வரை, 31 ஆயிரத்து 200 விண்ணப்பங்கள் விற்றுள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, நாளை மறுநாள் (20ம் தேதி), மாலை, 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்.,
படிப்புகளில், 2013-14ம் கல்வியாண்டிற்கான, மாணவர் சேர்க்கை
கலந்தாய்விற்கு, இம்மாதம், 9ம் தேதி, விண்ணப்பங்கள் விற்பனை துவங்கியது.
அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் நடந்து வரும் விண்ணப்ப விற்பனை,
இன்றுடன் முடிகிறது.
நேற்று மட்டும், 1,074 மற்றும் இதுவரை மொத்தம், 31 ஆயிரத்து 200 விண்ணப்பங்கள், விற்பனை ஆகி உள்ளன.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...