தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி 8% உயர்த்தப்படுவதாக தமிழக முதல்வர் இன்று அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுப் பேசிய
முதல்வர் ஜெயலலிதா, தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த
அகவிலைப்படி 8% உயர்த்தப்படும். இது கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் முன்
தேதியிட்டு வழங்கப்பட உள்ளது.
அகவிலைப்படி உயர்வின் மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ.1,631 கோடி செலவாகும்.
இந்த அகவிலைப்படி உயர்வின் மூலம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு
ஊழியர்கள் என 18 லட்சம் பேர் பயனடைவார்கள் என்று கூறினார்.