பின்தங்கிய மக்களுக்கு உடனடி வேலைவாய்ப்புகளை அளிக்கும் பட்டய வகுப்புகளை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.
கேட்டரிங், எலக்ட்ரிக்கல், உணவுத்
தயாரிப்பு மற்றும் பதப்படுத்துதல் உள்பட பல்வேறு துறைகளில் திறன்மிக்க
படிப்புகள் உடனடி வேலைவாய்ப்பு கிடைக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இத்திட்டங்கள் பரீட்சார்த்த முறையில், நாடு முழுவதும் 200 சமுதாயக்
கல்லூரிகளில் செயல்படுத்தப்பட உள்ளன.
அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு இத்திட்டம்
செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை
ஜூன் மாதம் முதல் 11 சமுதாயக் கல்லூரிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட
உள்ளது.
இத்திட்டத்தை செயல்படுத்த உள்ள சமுதாயக்
கல்லூரி முதல்வர்களுக்கு, புத்தாக்கப் பயிற்சி சென்னையில்
நடத்தப்பட்டுள்ளது. இத்திட்டங்களை, சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட நிலையில்
உள்ளவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்
கொள்ளப்பட்டுள்ளது.