மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகளின் அமைவிடம்: கூட்டத்தில் வலியுறுத்தல்:
"மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகளின் இடவசதி அமைவிடம் குறித்து தமிழக அரசு வரையறை செய்ய வேண்டும்" என மதுரையில் நேற்று நடந்த தென் மாவட்ட தனியார் பள்ளிகளுக்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தனியார் பள்ளிகள் துவங்க,
அங்கீகாரம் பெற அரசு உத்தரவு எண்:48 (2004)ல், மாநகராட்சியில் அமைந்த ஒரு
பள்ளிக்கு குறைந்தது 6 கிரவுண்ட் இடமும், மாவட்ட தலைநகரில் 8 கிரவுண்ட்,
நகராட்சியில் 10 கிரவுண்ட், பேருராட்சியில் ஒரு ஏக்கர், ஊராட்சியில் 3
ஏக்கர் இடமும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும், என வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்த விதிகளை கடைபிடிக்க முடியாமல் 800 தனியார் பள்ளிகள் அங்கீகாரம்
பெறாத நிலை ஏற்பட்டது. இதுதொடர்பாக, தமிழக அரசு அமைத்த குழு மதுரையில் 3வது
கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தியது. குழுத் தலைவர் பள்ளிக் கல்வி
இயக்குனர் தேவராஜன் தலைமை வகித்தார்.
தனியார் பள்ளி நிர்வாகிகள், பெற்றோர் தெரிவித்ததாவது: மாணவர் ஒருவருக்கு
ஒரு பள்ளியில் 10 சதுரடி இடவசதி செய்ய வேண்டும் என விதி உள்ளது. பள்ளியில்
மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப அமைவிட அளவை வரையறை செய்ய வேண்டும். நேஷனல்
பில்டிங் கோடு (என்.பி.சி.,) பரிந்துரையை ஏற்று, 3.5 கிரவுண்ட் என
குறைந்தபட்ச இடவசதியை நிர்ணயிக்க வேண்டும்.
சிட்டிபாபு கமிட்டி பரிந்துரைப்படி நில அளவு குறைந்த பள்ளிகளில் அருகில்
உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பொது இடங்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
பள்ளிகளுக்கு இடையிலான இடைவெளியை குறைக்க வேண்டும்.
சம்பத் கமிட்டி பரிந்துரையை ஏற்று, இரு தளங்களில் மட்டுமே பள்ளிகள்
இயங்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை நீக்கி, தக்க ஆய்வுக்கு பின் தளங்கள்
அதிகம் உள்ள கட்டடத்தின் பள்ளிகள் இயங்க அனுமதிக்க வேண்டும், என்றனர்.
இயக்குனர் தேவராஜன் பேசியதாவது: கூட்டத்தில் தெரிவிக்கப்படும்
கருத்துகள் அரசுக்கு அறிக்கையாக வழங்கப்படும். இடஅமைவிடம் குறித்த முடிவை
அரசு பின் அறிவிக்கும், என்றார்.
இணை இயக்குனர்கள் லதா(தொடக்க கல்வி துறை), செல்லம்(கள்ளர் பள்ளி),
சி.இ.ஓ., அமுதவல்லி, மாவட்ட கல்வி அலுவலர் ஜெயமீனாள் தேவி, மெட்ரிக் பள்ளி
ஆய்வாளர் எமரல்சி, உடற்கல்வி ஆய்வாளர் பரமேஸ்வரி பங்கேற்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...