அங்கீகாரம் பெறாத மருத்துவ கல்லூரிகள்: சுகாதார துறை செயலர் எச்சரிக்கை:
உரிய அங்கீகாரம் பெறாமல் இயங்கும், தனியார் மருத்துவக் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.அவர் கூறியதாவது: ஆண்டுதோறும், எம்.பி.பி.எஸ்., படிப்பில், மாணவர் சேர்க்கைக்கு தகுதிபெறும் தனியார் கல்லூரிகளின் பெயர் பட்டியல், எம்.சி.ஐ., மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை இணைய தளங்களில் வெளியிடப்படுகிறது. அதை பார்க்காமல், குறிப்பிட்ட கல்வியாண்டுகளில், மாணவர்கள், டி.டி., மருத்துவக் கல்லூரியில் சேர்த்துள்ளனர்.
இந்த பிரச்னையில், எம்.சி.ஐ., யின் வழிக்காட்டுதல்படி, தமிழக அரசு
நடவடிக்கை எடுக்கும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேருவதற்கு
முன், குறிப்பிட்ட கல்வியாண்டில், எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கைக்கு,
அக்கல்லூரி உரிய அனுமதி பெற்றுள்ளதா? எவ்வளவு இடங்களுக்கு அனுமதி
கிடைத்துள்ளது? போன்ற அடிப்படை விவரங்களை, எம்.சி.ஐ., இணைய தளத்தில்
பார்த்து உறுதிசெய்த பின்தான், கல்லூரியில் சேர வேண்டும் என்றார்.
குறிப்பிட்ட தனியார் கல்லூரியின் இணையதளத்தில் வெளியிடப்படும் தகவல்களை
மட்டும் நம்பி அதில் சேரக்கூடாது. உரிய அங்கீகாரம் பெறாமல் இயங்கும்
தனியார் மருத்துவக் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, ராதாகிருஷ்ணன் கூறினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...