காரைக்குடியில் உள்ள அழகப்ப செட்டியார் பொறியியல்
தொழில்நுட்பக் கல்லூரியில், பொறியியல் இரண்டாமாண்டு நேரடி மாணவர்
சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை (ஜூன் 26) முதல் தொடங்குகிறது.
கலந்தாய்வில் பங்கேற்கும் டிப்ளமோ மாணவர்கள், பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் பட்டியலைச் சமர்ப்பித்தாலே போதுமானது என்று தொழில்நுட்பக் கல்வி ஆணையர் குமார் ஜெயந்த் கூறினார்.
டிப்ளமோ முடித்த மாணவர்கள், பி.எஸ்சி. முடித்த மாணவர்கள் இந்தக் கலந்தாய்வில் பங்கேற்று நேரடியாக பி.இ. இரண்டாம் ஆண்டில் சேரலாம்.
கலந்தாய்வு தொடங்க உள்ள நிலையில், டிப்ளமோ முடித்த மாணவர்களுக்கு இதுவரை மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால், கலந்தாய்வுக்கு விண்ணப்பித்திருந்த மாணவர்கள் பதற்றமடைந்தனர்.
பி.இ. நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக் குழுவிடம் டிப்ளமோ தேர்வு முடிவுகள் சி.டி.க்களில் வழங்கப்பட்டுவிட்டன. எனவே, மாணவர்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் பட்டியலுடன் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
காரைக்குடியில் உள்ள அழகப்பா செட்டியார் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 26 முதல் ஜூலை 17 வரை பி.இ. நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.
கலந்தாய்வில் பங்கேற்கும் டிப்ளமோ மாணவர்கள், பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் பட்டியலைச் சமர்ப்பித்தாலே போதுமானது என்று தொழில்நுட்பக் கல்வி ஆணையர் குமார் ஜெயந்த் கூறினார்.
டிப்ளமோ முடித்த மாணவர்கள், பி.எஸ்சி. முடித்த மாணவர்கள் இந்தக் கலந்தாய்வில் பங்கேற்று நேரடியாக பி.இ. இரண்டாம் ஆண்டில் சேரலாம்.
கலந்தாய்வு தொடங்க உள்ள நிலையில், டிப்ளமோ முடித்த மாணவர்களுக்கு இதுவரை மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால், கலந்தாய்வுக்கு விண்ணப்பித்திருந்த மாணவர்கள் பதற்றமடைந்தனர்.
பி.இ. நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக் குழுவிடம் டிப்ளமோ தேர்வு முடிவுகள் சி.டி.க்களில் வழங்கப்பட்டுவிட்டன. எனவே, மாணவர்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் பட்டியலுடன் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
காரைக்குடியில் உள்ள அழகப்பா செட்டியார் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 26 முதல் ஜூலை 17 வரை பி.இ. நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...