இந்த ஆண்டு வேளாண் படிப்பில் 70 சதவீதம் பெண்கள் சேர்ந்துள்ளனர்:
வேளாண் துறை சார்ந்த படிப்புகளில் சேர்வதற்கு பெண்கள் தற்போது, அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.விவசாயம் என்பது உடல் உழைப்பு சார்ந்தது என எண்ணி,
இப்படிப்பை பயில முன்பு அதிகளவில் பெண்கள் முன் வரவில்லை. விவசாயத்தில்
இயந்திரங்களின் பயன்பாடு வந்த பின், கோவை வேளாண்மை பல்கலையில் பெண்களின்
சேர்க்கை அதிகரித்துள்ளது.
1972ல் ஒரே ஒரு மாணவி மட்டுமே இங்கு படித்த நிலையில், இன்று பயில்பவர்களில் பெரும்பான்மையோர் பெண்கள் தான்.
ஜூலை 6ம் தேதி இங்கு நடந்த மாணவர் கவுன்சிலிங்கில் 1018
பேர் வேளாண்மை படிப்புகளை தேர்வு செய்தனர். இதில் 699 பேர் பெண்கள். ஆண்களை
விட பெண்களின் செயல்பாடு, சிறப்பாக இருப்பதால் தான் அவர்களுக்கு அதிகளவில்
இடம் கிடைத்துள்ளது. வரும் ஆண்டுகளில் இந்த விகிதம் மேலும் அதிகரிக்கும்.
இங்கு பயின்ற பெண்களில் பலர், விவசாயத்துறை சார்ந்த
நிறுவனங்களில் பணியில் உள்ளனர். பலர் வங்கி மற்றும் அரசு வேலையிலும், சிலர்
மேற்படிப்பு, ஆராய்ச்சி, ஆசிரியையாகவும் உள்ளனர். இப்படிப்பை முடித்து
விட்டு சிவில் சர்வீஸ் தேர்வை எதிர் கொள்வோர் எண்ணிக்கை, அதிகரித்து
வருகிறது. இப்படிப்புகள், பல தொழில் வாய்ப்புகளையும் உருவாக்குகின்றன.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...