எம்.பி.பி.எஸ்., இடங்களை அதிகரிக்க மத்திய அரசு முடிவு:
எம்.பி.பி.எஸ்., சீட்களின் எண்ணிக்கையை, மேலும் அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இதுதொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: நாட்டில் உள்ள மக்கள் தொகைக்கேற்றபடி, டாக்டர்களின் எண்ணிக்கை இல்லை. எனவே, மக்கள் தொகைக்கேற்ப, டாக்டர்களின் விகிதாசாரத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, நாடு முழுவதும் உள்ள, அரசு மற்றும் தனியார் மருத்துவ
கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு, ஒட்டு மொத்தமாக, மேலும், 3,000
மாணவர்களை சேர்க்க, இந்திய மருத்துவ கவுன்சில், மத்திய அரசுக்கு அனுமதி
அளித்துள்ளது.
இதன்படி, 10 ஆண்டுகளாக, தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் மருத்துவ
கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு கூடுதலாக, மாணவர்களை சேர்க்க
அனுமதி அளிக்கப்படவுள்ளது. தற்போது, 50 எம்.பி.எஸ்., சீட்கள் உள்ள மருத்துவ
கல்லூரிகளில், இந்த எண்ணிக்கையை, 100 ஆக அதிகரிக்கவும், 100 சீட்கள் உள்ள
கல்லூரிகள், எண்ணிக்கையை, 150 ஆக அதிகரிக்கவும், அனுமதி அளிக்கப்படவுள்ளது.
இம்மாத இறுதிக்குள், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என,
எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, நாடு முழுவதும், 362 மருத்துவ கல்லூரிகள்
உள்ளன. இவற்றில், 45,000 எம்.பி.பி.எஸ்., சீட்கள் உள்ளன.
மத்திய அரசின் புதிய திட்டத்தின்படி, எம்.பி.பி.எஸ்., சீட்களின்
எண்ணிக்கை, 48,000 ஆக அதிகரிக்கும். இவ்வாறு, மத்திய அரசு வட்டாரங்கள்
தெரிவித்தன.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...