எம்.பி.பி.எஸ். தேர்வு: புதிய மதிப்பெண் முறை ரத்து:
எம்.பி.பி.எஸ். தேர்வில் வெற்றி பெறுவதற்காக
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் கொண்டு வந்த புதிய
மதிப்பெண் முறையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ். தேர்வில் வெற்றி பெறுவதற்கான தகுதி மதிப்பெண்களில்
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் 2011-ஆம் ஆண்டு
மாற்றம் செய்தது.
பல்கலைக்கழகத்தின் இந்த புதிய விதிமுறைகளை எதிர்த்து
மாணவர்கள் பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்
நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் புதிய விதிமுறைகளை அமல்படுத்தக் கூடாது
என்றும், ஏற்கெனவே அமலில் உள்ள இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைகளின்
அடிப்படையிலேயே தேர்வில் தேர்ச்சி அளிக்கப்பட வேண்டும் என்றும்
உத்தரவிட்டன.
இந்நிலையில் நடப்பாண்டு எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டுத் தேர்வில் வெற்றி
பெறுவதற்கான மதிப்பெண் முறைகள் பற்றி புதிய விதிமுறைகளை மருத்துவப்
பல்கலைக்கழகம் வெளியிட்டது. இதனை எதிர்த்து சி.பிரவீண் உள்ளிட்ட பல
மாணவர்கள் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால், நீதிபதி எம்.சத்தியநாராயணன்
ஆகியோர்,
பல்கலைக்கழகத்தின் புதிய விதிமுறையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
ஏற்கெனவே பல்கலைக்கழகம் உருவாக்கிய தேர்ச்சிக்கான மதிப்பெண் விதிமுறையை
உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் ரத்து செய்துள்ளன. இந்நிலையில் புதிய
மொந்தையில் உள்ள பழைய கள்ளைப் போல, பல்கலைக்கழகம் அதேபோன்ற விதிமுறைகளை
மீண்டும் உருவாக்கியுள்ளது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்தக் கூடாது என நீதிமன்றம் கூறவில்லை.
மருத்துவத் துறையின் தற்போதைய முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு
அதற்கேற்றவாறு, இந்திய மருத்துவ கவுன்சில் தனது விதிமுறைகளில் தகுந்த
மாற்றங்களைக் கொண்டு வரலாம் என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில்
கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...