பார்வையற்றோருக்கு சென்னையில் இலவச கணினி பயிற்சி:
பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு, சென்னையில், ஓராண்டு இலவச கணினி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயன்பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள், ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கம் சார்பில், சென்னையில், ஓராண்டு கணினி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில், கணினி, திறன் வளர்ப்பு பயிற்சி, மற்றும் இந்தி பேச்சுப் பயிற்சி வகுப்பு நடத்தப்படும்.
பயிற்சி காலத்தில், தங்கும் இடம், மாதந்தோறும், 200 ரூபாய் ஊக்கத்தொகை
வழங்கப்படும். அடுத்த மாதம், 15 தேதிக்குள், விண்ணப்பங்களை அனுப்ப
வேண்டும். மேலும், விபரங்களுக்கு, 94445 49865, 89257 67989 ஆகிய எண்களில்
தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...