அண்ணாமலைப் பல்கலை : குறுந்தகவல் மூலம் மாணவர் குறைதீர்க்கும் சேவை பிரிவு துவக்கம்:
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகக்
கட்டடத்தில் குறுந்தகவல் மூலம் மாணவர்கள் குறை தீர்க்கும் சேவை பிரிவினை
பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.மேலும் அவர் நிர்வாகக் கட்டடத்தில் மாணவர்கள் அனுமதி சேர்க்கை,
தேர்வுகள் மற்றும் இதர விபரங்களை அறிந்து கொள்ளும் வகையில் இரு தனி சிறப்பு
சேவை பிரிவினையும் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பதிவாளர் (பொறுப்பு) என்.பஞ்சநதம், மாவட்ட வருவாய்
அலுவலர்கள் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், டி.கிருஸ்துராஜ், தேர்வு கட்டுப்பாட்டு
அதிகாரி ஏ.ரகுபதி, புல முதல்வர்கள் டாக்டர் என்.சிதம்பரம் (மருத்துவம்),
டி.வேலுசாமி (பொறியியல்), ரவி டேவிட் ஆஸ்டின் (பல்மருத்துவம்), செல்வராஜ்
(கலைப்புலம்), கதிரேசன் (வேளாண்மை), ரவீந்திரன் (விளையாட்டுத்துறை)
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா செய்தியாளர்களிடையே தெரிவித்தது:
மாணவர்கள் ராகிங், கல்வி, விடுதி மற்றும் பல்கலைக்கழக தொடர்புடைய குறை
மற்றும் புகாரினை குறுந்தகவல் மூலம் எனது கவனத்திற்கு கொண்டு வரும் வகையில்
இந்த சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. புகார் செய்யும் மாணவர்களின் பெயர்
மற்றும் செல்போன் எண் ரகசியமாக வைக்கப்படும். புகார் அனுப்ப வேண்டிய
செல்போன் எண்கள்: 94869 27780, 96004 88999.
தனி சிறப்பு பிரிவிற்கான பணிகளை மேற்கொள்ள பேராசிரியர் ராஜேந்திரன்
ஆலோசகராகவும், 3 தனி அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அண்ணாமலைப்
பல்கலை தொலைதூரக்கல்வி மையத்தில் கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்டு மாதத்தில் 16
ஆயிரம் பேர் அனுமதி சேர்க்கை செய்தனர். இந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்டு மாதத்தில்
23 ஆயிரம் பேர் அனுமதி சேர்க்கை செய்யப்பட்டுள்ளனர். அனுமதி சேர்க்கைக்கு
கடைசி தேதி 30-9-2013 ஆகும் என ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...