நிலவுக்கு "ரோபாட்டிக்" காரை அனுப்புகிறது அமெரிக்கா:
நிலவுக்கு, அடுத்த மாதம், "ரோபாட்டிக் கார்" ஒன்றை, அமெரிக்கா அனுப்புகிறது.அமெரிக்க விண்வெளி அமைப்பான, "நாசா" பல்வேறு ஆய்வுகளைச் செய்து வருகிறது. விண்கலங்கள், செயற்கைக்கோள்களை,பல்வேறுகிரகங்களுக்கு அனுப்பி சாதனை செய்துள்ளது.இந்த வகையில், தற்போது, சிறிய கார் வடிவில், ரோபாட் வாகனத்தை, நிலாவுக்கு அனுப்புவதற்கான, இறுதிக்கட்ட பணியில், நாசா ஈடுபட்டு உள்ளது. அடுத்த மாதம், 6ம் தேதி, வர்ஜீனியாவின் கடற்கரைப் பகுதியில் உள்ள ஏவுதளத்தில் இருந்து, அமெரிக்க விமானப் படையின், "மினோட்டர் வி ராக்கெட்" மூலம், இந்த ரோபாட் வாகனம், நிலவுக்கு அனுப்பப்பட உள்ளது.
இது குறித்து, நாசா விஞ்ஞானிகள் குறிப்பிடுகையில், "வானில்
மிதக்கும் தூசி, துகள்கள் மத்தியில், மிதக்கும் நிலவு குறித்த விரிவான
ஆய்வை மேற்கொள்வதன் மூலம், சூரிய குடும்பத்தில் உள்ள பிற கிரகங்களை அறிய
உதவியாக இருக்கும். இந்த ரோபாட் கார் மூலம், நிலவின் அரிய படங்களைப் பெற
முடியும்" என்றனர்.