சோழர் கால ஓவியம் தொல்லியல் மாணவர்களால் கண்டுபிடிப்பு:
திருவொற்றியூரில் உள்ள ஆதிபுரீஸ்வரர் கோவிலில் சோழர் கால ஓவியம் தொல்லியல் மாணவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஓவியம், 7ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என, தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை, திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன்
கோவில் 1,300 ஆண்டுகாலத் தொன்மை உடையது. ஆதிபுரீஸ்வரர் கோவில் எனவும்
அழைக்கப்படுகிறது. இதில், இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில்,
திருப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தொல்லியல் துறையின் ஆய்வு மாணவர்கள், தீபிகா
சங்கரலிங்கம், விஜய் ஆகியோர் அங்கு ஆய்வுப் பணி மேற்கொண்டனர். ஆய்வில்,
முன்மண்டபக் கருவறைக்குள், ஓவியம் ஒன்று இருந்ததை அறிந்தனர். அந்த ஓவியம்
90 சதவீதம் சிதைந்திருந்த நிலையில், காணப்பட்டது.
உடனே, தொல்லியல் துறையின் பொறுப்பு ஆணையர், வசந்தி,
கல்வெட்டு ஆய்வாளர் லோகநாதன் ஆகியோர், அக்கோவிலில் ஆய்வு செய்தனர்.
ஓவியத்தில் காணப்படும் குறிப்புகளின் மூலம், அது சோழர் காலத்தைச் சேர்ந்தது
என்பது, உறுதியானது. தற்போது, ஓவியத்தைப் பாதுகாப்பதற்கான பணிகளில்,
தொல்லியல் துறை ஈடுபட்டு உள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...