மருத்துவ மாணவர்களுக்கு இரட்டை மதிப்பீடு: எம்.ஜி.ஆர்., பல்கலையின் வழிமுறைகள் ரத்து:
மருத்துவ மாணவர்களுக்கு, எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலைக்கழகம் கொண்டு வந்த இரட்டை மதிப்பீட்டு முறையை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது.கடந்த, 2012 - 13ம் கல்வியாண்டில், மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்காக எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலைக் கழகம் புதிய வழிமுறைகளை கொண்டு வந்தது. அதன்படி, இரட்டை மதிப்பீட்டு முறை அமல்படுத்தப்பட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் முதலாம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
மனுக்களை, தலைமை நீதிபதி (பொறுப்பு) அகர்வால், நீதிபதி
சத்திய நாராயணன் அடங்கிய, "முதல் பெஞ்ச்" விசாரித்தது. மாணவர்கள் சார்பில்,
வழக்கறிஞர்கள் தங்கசிவன், ஜி.சங்கரன் ஆஜராகினர். வழக்கறிஞர் தங்கசிவன்,
"மதிப்பெண் முறை தொடர்பாக, ஏற்கனவே, எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலை கொண்டு
வந்த விதிமுறைகளை, ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. அதே விதிமுறைகளைப்
பின்பற்றி, இரண்டு முறை விடைத்தாள்களை திருத்துவது சரியல்ல. இது, இந்திய
மருத்துவக் கவுன்சிலின் வழிமுறைகளுக்கு எதிரானது," என்றார்.
மனுக்களை விசாரித்த, "முதல் பெஞ்ச்" பிறப்பித்த உத்தரவு:
தியரி பேப்பர்களுக்கு தனித்தனியாக, இரட்டை மதிப்பீடு முறையை அமல்படுத்த
முடியாது என்றும், தியரி பேப்பரில் நேர்முகத் தேர்வில் பெறும்
மதிப்பெண்ணையும் கணக்கிட்டு சராசரி மதிப்பெண் கொண்டு வரப்படுகிறது என்றும்,
மனுதாரரின் வழக்கறிஞர்கள், சரியாகக் குறிப்பிட்டனர்.
எனவே, தியரி மற்றும் நேர்முகத் தேர்வில் பெறப்படும்
மதிப்பெண், சராசரியாக கணக்கிடப்படுவதால், தியரி பேப்பர்களுக்கு மட்டும்,
இரட்டை மதிப்பீடு என, கொண்டு வர முடியாது. எனவே, எம்.ஜி.ஆர்., மருத்துவப்
பல்கலைக் கழகம் கொண்டு வந்த, புதிய வழிமுறைகள் ரத்து செய்யப்படுகின்றன.
இவ்வாறு, "முதல் பெஞ்ச்" உத்தரவிட்டு உள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...