உடலும் உள்ளமும் நலம் தானா: இன்று தேசிய விளையாட்டு தினம்:
இந்தியாவின் சிறந்த ஹாக்கி வீரராக திகழ்ந்த "தயான் சந்த்"தை கவரவிக்கும் விதமாக அவரது பிறந்த தினம், தேசிய விளையாட்டு தினமாக (ஆக.29) கொண்டாடப்படுகிறது. விளையாட்டு மீதான ஆர்வத்தை வருங்கால சந்ததியினரிடம் உருவாக்குவதே இதன் நோக்கம்.
விண்வெளி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா முன்னேற்றம்
கண்டுள்ளது. விளையாட்டு துறையில் மட்டும் இன்னும் பின் தங்கியே உள்ளது.
சமீபத்தில் ரஷ்யாவில் நடந்த உலக தடகளப்போட்டியில், இந்தியா சார்பில் 15
வீரர்கள் பங்கேற்றனர். இந்தியாவால் ஒரு பதக்கம் கூட வெல்ல முடியவில்லை.
இந்தியாவை விட சிறிய நாடுகள் கூட, பதக்கங்கள் வென்று, பெருமை
சேர்த்தனர். இது இந்தியாவில் விளையாட்டுத் துறை எந்தளவுக்கு இருக்கிறது
என்பதை வெளிப்படுத்துகிறது. 120 கோடி மக்கள் வாழும் இந்த நாட்டில் சில நூறு
சிறந்த வீரர்களை உருவாக்குவது கூட முடியவில்லை என்பது வேதனைக்குரியது.
தயான் சந்த்தை கவரவிக்கும் விதமாக தேசிய விளையாட்டு தினம் இன்று
கொண்டாடப்படுகிறது. தயான் சந்த் 1905 ஆக. 29ல் உத்தரபிரதேத்தின் அலகாபாத்
நகரில் பிறந்தார். 14வது வயதில் ஹாக்கி விளையாட துவங்கினார். ராணுவத்தில்
சேர்ந்த தயான் சந்த், இந்திய ராணுவ ஹாக்கி அணியில் இடம்பெற்றார்.
சர்வதேச அளவில் ஹாக்கி போட்டிகளில், ஆயிரம் கோல்கள் அடித்த ஒரே வீரர்
என்ற சாதனைக்கு சொந்தக்காரர் இவரே. 1928ம் ஆண்டு ஆம்ஸ்டர்டம் ஒலிம்பிக்
போட்டியில், முதன் முதலாக இந்திய ஹாக்கி அணி அறிமுகமானது. இதில் தயான்
சந்த்தும் இடம் பெற்றிருந்தார். இதில் இந்தியா தங்கப்பதக்கம் கைப்பற்றியது.
தயான் சந்த் 14 கோல்கள் அடித்தார்.
1932 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியிலும் இந்தியா தங்கப்பதக்கம்
கைப்பற்றியது. இத்தொடரில் தயான் சந்த் 133 கோல் அடித்து சாதனை படைத்தார்.
1936ல் பெர்லின் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று ஹாட்ரிக்
தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. இதில் தயான் சந்த் 33 கோல் அடித்தார்.
1956ல், 51வது வயதில் இந்திய ராணுவத்தில் மேஜர் பதவியுடன் ஓய்வு
பெற்றார். இவரது சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக இதே ஆண்டு இவருக்கு இந்திய
அரசு, பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்தது. 1979 டிச. 3ல் மறைந்தார்.
விளையாட்டில் தற்போது அரசியல் கலந்து விட்டது. இதன் காரணமாக வீரர்கள்
தேர்வு, விருது தேர்வு என அனைத்திலும் குழப்பமே ஏற்படுகிறது. கிரிக்கெட்
விளையாட்டுக்கு தரப்படும் விளம்பரம், ஸ்பான்சர்ஷிப் வேறு எந்த
போட்டிகளுக்கும் கிடைப்பதில்லை. விளையாட்டு என்றாலே கிரிக்கெட் மட்டும்
தான் இருக்கிறது என பலர் நினைக்கின்றனர்.
போதிய மைதானங்கள், உபகரணங்கள் நாட்டில் குறைவாகவே உள்ளது. பெற்றோரும்
தனது பிள்ளை டாக்டராகவோ, இன்ஜினியராகவோத் தான் விரும்புகின்றனர். யாரும்
விளையாட்டு வீரராக்க விரும்புவதில்லை. பள்ளிகளில் கூட விளையாட்டு பிரிவு,
பெயரளவுக்குத் தான் இருக்கிறது. விளையாட்டும் மதிப்பெண் உள்ள ஒரு
பாடப்பிரிவாக மாற வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு சலுகைகள் வழங்க
வேண்டும்.
வீரர்களுக்கு விருது: தேசிய விளையாட்டு தினத்தில், சாதனை படைத்த
வீரர்களுக்கு ராஜிவ்காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா, மற்றும் துரோணாச்சாரியார்
விருதுகள் ஜனாதிபதியால் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. இந்தாண்டு 31ம் தேதி
இவ்விழா நடக்கிறது. விளையாட்டு துறையில் சாதனை படைத்த மற்றும் ஓய்வுக்குப்
பிறகும் விளையாட்டு துறைக்கு உரிய பங்களிப்பு வழங்கியவர்களுக்கு தயான்
சந்த் பெயரில் 2002ம் ஆண்டு முதல் விருது வழங்கப்படுகிறது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...