தமிழகத்தில் 2,400-க்கும் அதிகமான பள்ளிகளில் நிதி மேலாண்மை குறித்து பயிற்சி:
தமிழகத்தில் 2,400-க்கும் அதிகமான பள்ளிகளில் நிதி மேலாண்மை குறித்த பயிற்சி வழங்கப்படுகிறது.பள்ளிக் கல்வி இயக்குநரகம் மற்றும் தேசிய பங்குச் சந்தை செய்துகொண்டுள்ள
ஒப்பந்தத்தின்படி 8,9,11,12 ஆம் வகுப்பு தமிழ், ஆங்கில வழி பயிலும்
மாணவர்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது.
இதன் மூலம் மாணவர்கள் நிதி மேலாண்மை, சேமிப்பு, புத்திசாலித்தனமாகச்
செலவு செய்தல் உள்ளிட்ட அத்தியாவசியமான விஷயங்களைக் கற்று வருகின்றனர்.
இந்தப் பயிற்சி மூலம் நடப்பாண்டில் (2013-14) 7 லட்சத்து 40 ஆயிரம்
மாணவர்கள் நிதி மேலாண்மை குறித்து அறிந்து வருவதாக தேசிய பங்குச் சந்தையின்
முதன்மை வணிக வளர்ச்சி அதிகாரி ரவி வாரணாசி கூறினார்.
இந்த மாணவர்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் 25 வகுப்புகளோடு பிளஸ் 1, பிளஸ் 2
மாணவர்களுக்குக் கூடுதலாக 6 வகுப்புகள் நடைமுறைப் பயிற்சியும்
வழங்கப்படுகிறது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...