Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
தஞ்சையில் மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோஜி 236வது பிறந்த
நாளையொட்டி சரஸ்வதி மஹால் நூலகத்தில் நூல்கள் வெளியீட்டு விழா நடந்தது.
நூலக தமிழ்ப் பண்டிதர் மணி மாறன் எழுதிய சரபேந்திர பூபால குறவஞ்சி, தமிழறி
மடந்தை கதை உள்பட 8 புதிய நூல்களும், மறுபதிப்பு நூல் ஒன்றும் என, ஒன்பது
நூல்களை கலெக்டர், எம்.எல்.ஏ.,க்கள் வெளியிட்டனர்.
இதில், தஞ்சை மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோஜி அரசவையில்
புலவராக விளங்கிய கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் இயற்றிய சரபேந்திர
பூபால குறவஞ்சி என்னும் ஏட்டுச்சுவடியில் அமைந்த பாடல், பாட்டுடைத்தலைவன்
வரலாறு விளக்குவது சரபேந்திர பூபால குறவஞ்சி நூலாகும்.
மற்றொரு நூலான தமிழறி மடந்தை கதை என்பது கதை இலக்கிய
நூலாகும். ஏட்டுச்சுவடியில் அமைந்த நக்கீரர், ஒளவையார், கரிகாற்சோழன்,
பாண்டிய மன்னன் பாத்திர படைப்புகளை கொண்டது. கதையின் தலைவி, "தான் சொல்லும்
கவிக்கு எதிர் கவிதை படிக்கும் ஆணை திருமணம் செய்து கொள்வேன்" என, சபதம்
செய்கிறாள். வெண்பா வடிவத்தில் பாடல், விளக்கமான கதையை கொண்டது ஆகும்.
ஒன்பது நூல்களையும் வெளியிட்டு, கலெக்டர் பாஸ்கரன் பேசியதாவது:
தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்துக்கு சரஸ்வதி பண்டார் என,
முன்பு பெயர் வழங்கப்பட்டது. கடந்த 1918ல் மன்னர் சரபோஜி பெயரில் ஆய்வு
மையமாக செயல்பட துவங்கியது. இங்கு 49,000 சுவடிகளும் 45,000 நூல்களும்
உள்ளன.
இந்நூலகத்தை உலகத்தரத்தில் மேம்படுத்த 50 லட்சம் ரூபாய்
நிதியை அரசு ஒதுக்கீடு செய்தது. இதில், பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.
குறிப்பாக டிஜிட்டல் முறையில் சுவடி, நூல்களை படி எடுத்து சேகரித்து வைக்க
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சரஸ்வதி மஹால் நூலகத்தை மேம்படுத்த கடந்த 2013ம் ஆண்டு ஜூன்
11ம் தேதி பள்ளிகல்வித்துறை அமைச்சர் தலைமையில் உயர்மட்டக்குழு கூட்டம்
சென்னை தலைமை செயலகத்தில் நடந்தது. நூலகம் குறித்த குறும்படம் தயாரிக்கவும்
ஆவண செய்யப்படும்.
தேவநாகரி, கிரந்தம் போன்ற பழமையான மொழி எழுத்துகள் அழியாமல்
இருக்க சரஸ்வதி மஹால் நூலக ஆய்வு மையத்தில் ஆன்லைன் மூலம் கற்பிக்கும்
முறை செயல்படுத்தப்படும். சரஸ்வதி மஹால் நூலகம் மூலம் இதுவரை 540 நூல்கள்
வெளியிடப்பட்டுள்ளன.
இத்தகைய வரிசையில் நூலக தமிழ்ப்பண்டிதர் மணிமாறன் உள்பட
நூலக அலுவலர்கள் அரிய நூல்களை சிரமப்பட்டு, இயற்றி வெளிக்கொண்டு வருவது
சமூகத்துக்கும், வருங்கால தலைமுறையினருக்கும் பெரும் பொக்கிஷமாக
விளங்கும்." இவ்வாறு கலெக்டர் பேசினார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








