மாணவ-மாணவிகளுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் 30 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கு மென் திறன் பயிற்சி அளிப்பதற்காக முதல் கட்டமாக ஆசிரியர்களுக்கு பயிற்சி தொடங்கப்படுகிறது.
மென் திறன் பயிற்சிபள்ளிக்கல்வித்துறையை மட்டுமல்லாமல் உயர் கல்வித்துறையையும் சிறப்பாக தரம் உயர்த்துவதற்காக முதல்- அமைச்சர் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
அதன்படி 30 அரசு கல்லூரிகளை தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் தேர்ந்து எடுத்துள்ளது. அதாவது மாவட்டத்திற்கு ஒரு கல்லூரி தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு கல்லூரியிலும் மென் திறன் (சாப்ட் ஸ்கில்) பயிற்சி கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கல்லூரியிலும் 15 ஆசிரியர்கள் வீதம் மொத்தம் 450 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. கம்ப்யூட்டர், ஆங்கிலத்தில் பேசும் திறன், ஆளுமைத்திறன் ஆகியவற்றில் பயிற்சி கொடுக்கப்பட உள்ளது.
மாநில கல்லூரியில்...
இந்த பயிற்சி முதன் முதலாக சென்னை மாநில கல்லூரியில் தொடங்கப்பட உள்ளது. அங்கு அதற்கான கம்ப்யூட்டர் வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த பயிற்சி விரைவில் தொடங்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் 30 அரசு கலை அறிவியல் கல்லூரிகளிலும் இந்த மென் திறன் பயிற்சியை இன்டெல் நிறுவனம் அளிக்கப்படுகிறது.
பின்னர் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் அந்தந்த கல்லூரிகளில் உள்ள மாணவ-மாணவிகளுக்கு மென் திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பை இந்த மாணவர்கள் பெறுவார்கள். தொடர்ந்து தமிழ்நாட்டில் அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகளிலும் காலப்போக்கில் தொடங்கப்பட உள்ளது.
மேலும் தொழிற்சாலைகளுடனும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு அவர்களின் தேவைக்கேற்ற பயிற்சியை மாணவர்களுக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவலை தமிழ்நாடு உயர் கல்விமன்ற உறுப்பினர் செயலாளர் பேராசிரியர் கரு.நாகராஜன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...